Sunday 30 September 2018

ENGIRUNDHO VANDHAAN - 10


‘இங்கேயேவா இப்போதிலிருந்தேவா..’ என்று தயங்கினாள் மது.
“இல்லைமா, அங்கே எல்லாம் அப்படியே கிடக்கு... போட்டது போட்டபடி வந்துட்டேனே.... எல்லாம் முடிவாகட்டுமே மா” என்றாள் திக்கித் திணறி.
“சரிதான் திருமணத்துக்கு முன்னாடியே இங்க வந்து தங்க கூச்சமா இருக்காக்கும்.... அதுவும் சரிதான்.... நான் உங்க பூரணியோட பேசீட்டு முகூர்த்தம் குறிச்சுட்டு கூப்படறேன் சரியா.....
“போகலாம் மாலைவரை இரு..... அதுக்கு அப்பறமா திலீப் கொண்டுவிடுவான்” என்று அமர்த்தினார்.

கண்ணன் தூங்கி வழிவதைக்கண்டு அவனை தோளில் சாய்த்துக்கொண்டு தட்டி கொடுத்தாள். சில நிமிடங்களில் அவன் தூங்கி இருக்க
“வா மது, அவன நம்ம ரூமில படுக்க வை” என்று மேலே அழைத்துப்போனான்.
“வேண்டாம் நான் இங்கே கீழேயே படுக்க...”
“பேசாம வா” என்றான் அடங்கின குரலில்.
அவனோடு மாடி ஏறினாள்.
“என்னடி ரொம்பதான் பிகு பண்றே?” என்றான் ஆற்றாமையோடு.
“எம் பிள்ளை என் பெட்டில படுக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா” என்றான்.
“சரி அப்படியே” என்று அங்கே படுக்க வைத்து அருகில் தலையணை அண்டம் கொடுத்தாள்.
அவள் நிமிரும் முன்பே பின்னிருந்து அவளை கட்டிக்கொண்டு
“மது இவ்வளவு சீக்கிரம் நம்ம திருமணம் நிச்சயம் ஆகும்னு நான் நினைக்கவே இல்லை” என்றான் அவளை தன்னோடு மேலும் இறுக்கி கொண்டபடி.
“ம்ம் நானும்தான்”
“அம்மாதான் இங்கேயே இருன்னு சொன்னாங்களே, அப்பறம் ஏண்டீ?” என்று கேட்டான்.
“அவங்க பெரிய மனசு, சொல்லிட்டாங்க தீபு..... ஆனாலும் நான் எப்படி இங்க தங்க முடியும்... அது மரியாதை இல்லை..... நாம சொன்னதும் அப்படியே தங்கிட்டா அதுதான் சாக்குன்னு அம்மாக்கு தோணிடிச்சுன்னா?” என்றாள்.
“போடி” என்று அலுத்துக்கொண்டான்.

நாட்கள் மளமளவென ஓடியது. கோடை விடுமுறை ஆதலால் அவளுக்கு நிறைய நேரம் இருந்தது. பூரணி அம்மாவிடம் தானே விசாலத்தை அழைத்துச் சென்றாள் மது. அவருக்கு மிக்க மகிழ்ச்சி. விசாலத்தின் கைகளை பிடித்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர்விட்டார். அவரை முன்னிறுத்தி வீட்டோடு நிச்சயம் வைத்துக்கொண்டனர். முகூர்த்த தேதீ நிச்சயிக்கப்பட்டது.
மதுவையும் கூட கூட்டிக்கொண்டு கோவை சென்று கல்யாணத்திற்கு வேண்டிய ஜவுளிகளை எடுத்தார் விசாலம். நகைகள் சில வாங்கினர். பத்திரிகை அடித்து வந்தது. சில முக்கியமானவர்களுக்கு கொடுக்கவென மதுவையும் அழைத்துக்கொண்டு திலீப் சென்று வந்தான். அங்கு இங்கு அவனோடு செல்ல வசதியாக சில பிரிண்டட் பட்டுகளும் மெல்லிய நகைகளும் அவளுக்கென வாங்கி இருந்தான். அவள் தடுத்தும் கேளாமல் அவற்றை உடுத்திக்கொண்டு கூட வரச்செய்தான்.

திருமண நாளும் வந்தது. கண்ணனை விசாலம் கையில் ஏந்தி இருக்க திலீப் மதுவின் கழுத்தில் தாலி கட்டி முடித்தான். சிம்பிளாக திருமணத்தை முடித்துக்கொண்டு மிக கிராண்டாக வரவேற்பு வைத்திருந்தான் திலீப். அவனிடம் வேலை பார்க்கும் எல்லாத் தொழிலாளர்களும், பிசினஸ் சுற்றங்களும் சொந்தங்களும் நண்பர்களும் வந்து ஒருமுகமாக வாழ்த்தினர்.  எஸ்டேட் தொழிலாளர்களுக்கு மற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் இரண்டு மாத போனசும் புதுத் துணிகளும் வழங்கப் பட்டன. மதுவை பார்லரிலிருந்து வந்த பெண்கள் அழகோவியமாக அலங்கரித்திருந்தனர்.

எப்போதும் சாதா காட்டன் சல்வாரிலோ காட்டன் புடவையிலோ ஒரு சிறிய பொட்டு மட்டும் வைத்துக்கொண்டு நடமாடும் மதுவுக்கு இது தான்தானா என்று பிரமிப்பு ஏற்பட்டது கண்ணாடியில் தன்னைக் கண்டபொழுது.
திலீபோ சொக்கிப் போயிருந்தான். அலங்காரத்தில் அவள் அழகுக்கு அழகானாள். அவன் கண்களில் தெரிந்த மயக்கம் அவள் முகத்தை செம்மையுறச் செய்தது. கண்ணனுக்கு அந்த வயதுக்குண்டான சின்ன சூட் தைத்திருந்தான் திலீப். அதை போட்டுக்கொண்டு தன் சிறு நடையில் தத்தித் திரிந்தான் கண்ணன்.

இப்போது அவன் பாட்டியிடம் பெரும் ஒட்டுதல்.... சாப்பிடுவது தூங்குவது எல்லாமும் அவரோடுதான்..... விசாலத்திற்கு அதில் பெரும் மகிழ்ச்சி.... கண்ணனை மதுவின் அக்கா குழந்தை அவன் பெற்றோர் விபத்தில் இறந்துவிட்டனர்... அதனால் இவர்களே ஸ்வீகாரம் எடுத்து வளர்க்கின்றனர் என்று விசாலமே கூறி எல்லார் வாயையும் அடக்கிவிட்டார்.

வரவேற்புக்கு வந்திருந்த சுவாதிக்கு வயிறு எரிந்தது. ‘இந்த அற்பத்துக்கு வந்த வாழ்வு..... அவ்வளோ பெரிய அரண்மனையின் முதலாளியம்மாவா, இவளா இவளும் இவ பவிசும்’ என்று மாய்ந்து போனாள்.

வரவேற்பு முடிந்து வீட்டை அடைந்தனர். கண்ணன் விசாலத்திடமே தூங்கி இருக்க அவனை தனது அறையிலேயே படுக்க வைத்துக்கொண்டார். நன்றாக அலைந்திருந்தான். சாப்பாடும் விசாலமே ஊட்டி இருக்க அயர்ந்து தூங்கிவிட்டான்.

மேலே தன் அறைக்கு மதுவுடன் சென்ற திலீப்
“எம் பிள்ளை ரொம்ப சமத்துடீ” என்றான்.
ஏன் என்பதுபோல மது அவனை பார்க்க, “அப்பாக்கு அம்மாகிட்ட இன்னிக்கி நைட் நிறைய வேலை இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு சமத்தா சாப்பிட்டு தூங்கீட்டானே பாட்டிகிட்ட” என்று கண் அடித்தான்.
“சீ” என்று சிவந்து படபடத்து போனாள் மது.

அத்யாயம் பதினாறு

பொழுது விடிந்து எழுந்தாள் மது. திலீப் இன்னும் அசந்து உறங்கிக்கொண்டிருக்க தான் சென்று குளித்து கீழே இறங்கிச் சென்றாள். அங்கே கண்ணன் இன்னும் முழித்திருக்கவில்லை. பூஜை அறைக்குச்சென்று விளக்கு ஏற்றி வணங்கிவிட்டு வெளியே வந்தவள். காபி போட உதவினாள்.
“என்னதிது, வந்த முத நாளே சமையல் அறையில உனக்கென்ன வேலை... போ போ காப்பிய எடுத்துகிட்டு நீயும் குடிச்சுட்டு அவனையும் எழுப்பு” என்று மேலே அனுப்பிவிட்டார் விசாலம்.
“இல்லைமா அவர் இன்னமும் தூங்கராரு..... கண்ணனும் எழுந்து உங்கள படுத்துவானோன்னு...”   என்றாள்.
“அதெல்லாம் அவனும் அசந்துதான் தூங்கறான்.... நீ போ நான் பாத்துக்கறேன்” என்று கூறி அனுப்பினார். மேலே செல்ல திலீப் அப்போதே முழித்து புரண்டு கொண்டிருந்தான்.
“எங்க போனே இந்த காலையில?” என்றான் பிணங்கி.
“இல்ல குளிச்சுட்டு விளக்கேத்தீட்டு வந்தேன்.... இந்தாங்க காபி” என்று குடுத்தாள்.
“அங்க எட்ட நின்னு காபின்னா நாங்க எழுந்து வந்து எடுத்துக்கணுமாகும்.... நீ வந்து இங்க எம் பக்கத்தில ஒக்காந்து குடிக்க வை... அப்போதான் எழுந்திருப்பேன்” என்று அடம் செய்தான்.
“நான் குளிச்சாச்சுங்க..” என்றாள்.
“இருக்கட்டும் விளக்கும்தான் ஏற்றியாச்சே அப்பறம் என்ன வாடீன்னா” என்று அடம் செய்தான்.

நாணியபடி அவனருகே வந்து அமர்ந்து கப்பை நீட்டினாள். அவள் அதை பிடித்தபடியே அவன் குடித்து முடித்தான். பின் அவன் முகம் நோக்கி குனிய வெட்க மேலீட்டால் அவனிடம் இருந்து நழுவி கீழே சிட்டென பறந்துவிட்டாள்.
‘பெண்ணே உனக்கு நான் இன்னும் நிறைய பாடங்கள் கற்றுத்தரவேண்டும்’ என்று சிரித்துக்கொண்டான்.

கீழே சென்று பார்க்க அதிசயித்தாள். கண்ணன் எழுந்திருந்து விசாலத்திடம் கொஞ்சியபடி பாலை குடித்துக்கொண்டிருந்தான்.
“அட சமத்துப் பயலே, பாட்டிய படுத்தாம பால் குடிக்கிறியே” என்று மெச்சிக்கொண்டாள். தாயைக் கண்டதும் அவனும் இவளிடம் தாவினான். மிச்சம் பாலை தானே புகட்டினாள்.
பின்னர் திலீப் கீழே இறங்கி வர அவனிடம் தாவினான் கண்ணன்.
“டேய் பயலே என் செல்லக்கண்ணா” என்று கொஞ்சியபடியே அவனை வாங்கிக்கொண்டான். தன் மடியில் அமர்த்தியபடி பேப்பரை மேய்ந்தான்.

கண்ணனை விட்டுவிட்டு அதிக நாள் இருக்க முடியாதென்பதால் மூன்றே நாட்களுக்கென தேன் நிலவுக்குப் போக முடிவு செய்தான் திலீப். “மூணு நாளா?” என்று அதற்கே முழித்தாள் மது.
“என்னடி அவனவன் ஒரு வாரம் பத்து நாள்னு போறான்.... மூணு நாளான்னு மாய்ஞ்சு போறே.... கண்ணன் எனக்கும் மகன்தான் ஆனா அதைவிடவும் நீ என் மனைவி புது மனைவிடீ” என்றான் தாபத்தோடு. அவள் அவன் மனம் அறிந்து சரி என்றாள்.
“கண்ணன் என்னோட சமத்தா இருப்பான், நீங்க நல்லபடியா போய்ட்டு என்ஜாய் பண்ணீட்டு வாங்க” என்று தைரியம் கூறி அனுப்பினார் விசாலம்.
மூன்று நாள் மூன்று நிமிடங்களாக பறந்திட, மீண்டும் வந்து தங்கள் வேலைகளை தொடர்ந்தனர். மது தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டாள். வீட்டில் இருந்து கவனிக்க நிறைய வேலைகள் இருந்தன... மருமகள் என்னும் பொறுப்பு வேறு இருந்தது.... கூடவே கண்ணனை வேறு பார்த்துக்கொள்ள வேண்டி இருந்தது.

நாட்கள் கடந்து ஓடின. கண்ணனின் முதல் பிறந்த நாள் வந்தது. மதுவிற்கு பெரிதாக செய்ய ஆசை மனதில் இருந்தும் திலீப் விசாலம் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்று ஒரு பாயசம் வைத்து கோவிலுக்குச் சென்று வரலாம் என்று எண்ணி இருந்தாள். ஆனால் திலீப் இதை அறிந்தவுடன் பெரும் தடபுடலாக ஏற்பாடுகள் செய்துவிட்டான். 

நண்பர்கள் சொந்தங்கள் சுற்றத்தார் சில நெருங்கிய பிசினஸ் வட்டம் என்று அழைத்து விருந்து வைத்து கண்ணனை கேக் கட் செய்ய வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.... மதுவிற்கு அவனை பாராட்ட நன்றி கூற வார்த்தைகளே இல்லை. அவளது நன்றிகளை மனதின் ஆழ்ந்த  நெகிழ்ச்சியை வேறே விதங்களில் வெளிப்படுத்தி அவனை திக்குமுக்காட செய்துவிட்டாள்.
“என்னடி இன்னிக்கி என் காட்டில மழை.... இப்படி பரிசுகள் கிடைக்கும்னா தினமும் கண்ணனுக்குப் பிறந்த நாள் கொண்டாடலாம் போலிருக்கே” என்று அவளை சீண்டினான்.
“சி போங்க” என்று நாணி சிவந்தாள்.

அடுத்து வந்த நாட்களில் கண்ணன் அதை இதை பிடித்துக்கொண்டு நடமாடத் துடங்கி இருந்தான். அதனால் எந்த ஒரு சாமானையும் கீழே கை எட்டும்படி வைக்க முடியவில்லை. அவன் பின்னேயே சுற்ற வேண்டி இருந்தது மதுவுக்கு.
“என்னடா இப்படி படுத்தற கண்ணா” என்று அலுத்துக்கொண்டாள்.
அவன் அரிசி பல் சற்றே வெளியே தெரிய சிரித்து மயக்கினான்.
“போடா சிரிச்சு மயக்காதே, அம்மா ஒண்ணும் அசரமாட்டேன்” என்றாலும் கைகள் அவனை வாரி அணைத்துக்கொள்ளும்.

அந்த நாட்களில் ஒரு நாள் சில முக்கியமான பிசினஸ் கோப்புகளை மேசைமேல் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான் திலீப். அப்போது கால் வரவே போன் அருகே சென்று அங்கேயே பேசியபடி நிற்க, கண்ணன் அந்த கோப்புகளை கீழே தள்ளி காகிதங்களை சிதறவிட்டு அதன் மத்தியில் ஏறி அமர்ந்து கசக்கிக் கொண்டிருந்தான். உள்ளே வந்த திலீப் அதைக் கண்டு கோபமிகுதியில்
“கண்ணா என்னடா இது?” என்று கத்தினான். பட்டென ஒரு அடி வைத்தான் அவன் முதுகில். கண்ணன் ஒ என்று அழ ஓடி வந்தனர் விசாலமும் மதுவும்.
“என்ன கவனிக்கற நீ பிள்ளைய, இதப்பாரு” என்று அவளிடமும் இரைந்தான்.

அவன் ஆபிஸ் காகிதங்களை கண்ணன் வீணடித்தான் என்பதை உணர்ந்து அவளுக்குமே சங்கடமாக இருந்தது தான். ஆனாலும் கண்ணனை திலீப் அடித்துவிட்டான் என்றதும் அந்த அடி அவள் இதயத்தில் விழுந்தது. பேசாமல் அவனை ஒரு அடிபட்ட பார்வை பார்த்தபடி கண்ணனை கையில் எடுத்துக்கொண்டு மேலே சென்றுவிட்டாள்.

“என்னடா திலீப் இது, சின்னக் குழந்தைங்க அப்படிதான் துறு துறுன்னு இருக்கும்..... உன் ஆபிஸ் பேப்பர்ஸை நீதான் ஜாக்ரதயா வைத்துக்கணும்..... அதுக்கு பச்சை பிள்ளையை போட்டு அடிப்பாங்களா” என்று புத்தி கூறினார்.

ஏதுக்கே தன் மகனாக வரித்தவனை முதன் முறையாக அடித்துவிட்டோமே என்று தன்னையே நொந்தபடி இருந்தான் திலீப். இப்போது இன்னமும் மனம் வலித்தது. எல்லாவற்றையும் எடுத்து ஒழுங்கு படுத்திவிட்டு மேலே சென்றான். அங்கே கண்ணனை அணைத்து சமாதானபடுத்திக் கொண்டிருந்தாள் மது. அவனை ஆசையாக வாங்கிக்கொள்ள கை நீட்டினான் திலீப். தர மறுத்து அவனோடு எதுவும் பேசாமல் அடுத்திருந்த பால்கனிக்கு சென்றுவிட்டாள் மது.

அவன் பின்னேயே சென்று “சாரி மது, நான் அவசரப்பட்டு அடிச்சுட்டேன்.....” என்று மன்னிப்பு கூறினான். அவள் அப்போதும் அவனிடம் முகம் கொடுத்து பேசவில்லை. கண்ணனின் முதுகை தடவிகொடுத்துவிட்டு அவன் அவசரத்தில் குளித்து கிளம்பி காலை உணவிற்கென கீழே வந்தான்... அப்போதும் மது வரவில்லை.... என்றும் போல அவனுக்கு உணவு பரிமாறவில்லை விடை கொடுக்கவும் வரவில்லை. அவன் மனம் வலித்தது. ஆனால் நின்று யோசிக்க நேரமில்லாமல் ஆபிஸ் வேலை அழைத்தது.. ஓடிவிட்டான்.

மாலை சோர்ந்து நேரம் கழித்து வந்தான். அப்போதும் மது மேலேயே இருந்தாள். அவன் பிரெஷ் செய்துகொண்டு சாப்பிட வர, அப்போதும் வந்து பரிமாறவில்லை. கங்காரு போல கண்ணனை தன்னிடமே வைத்திருந்தாள். அவன் மேலே செல்ல கண்ணனுடன் அவள் கீழே சென்று கொஞ்சம் சாப்பிட்டு கண்ணனுக்கும் இரவு உணவு கொடுத்துவிட்டு வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டே மேலே சென்றாள். அவனை தூங்கச் செய்து தொட்டிலில் கிடத்திவிட்டு தானும் கட்டிலின் ஒரு ஓரத்தில் ஒருக்களித்து படுத்துக்கொண்டாள். கண்களை இறுக்க மூடி படுத்திருந்தாள். உள்ளம் கன்றி இருந்தது. மனம் வெதும்பி இருந்தது.

‘எம் பிள்ளை என்றுதானே அடித்துவிட்டான்.... எங்கள் குழந்தையாக இருந்திருந்தால்....’ என்று எண்ணியது மனம். அப்போது வரை பேசாமல் அவளின் பாராமுகத்தை தாங்கி வந்த திலீபால் அதைவிட தாள முடியாமல் அவளை அவன்புறம் திருப்பினான்... தோளை இறுக பற்றி. அவள் திரும்ப மறுக்க முரட்டுத்தனமாகவே திருப்பினான்.

“என்ன மது இது, சின்ன விஷயம்.... நான் மன்னிப்பும் கேட்டுட்டேன்.... இன்னமும் நீ இப்படி பாராமுகமா இருக்கறது நல்லா இல்லைடா” என்றான் மெதுவாக.
அவளுக்கு கண்ணீர் முட்டியது. “நான் ஏதேனும் தப்பு செய்திட்டேனா மது... எம் பிள்ளையை அடிக்க எனக்கு உரிமை இல்லையா?” என்று கேட்டான். அவள் விசும்பினாள்.
“ஏதானும் சொல்லு மது” என்றான் அலுத்தபடி.

“நிஜமாவே உங்க பிள்ளையா இருந்திருந்தா அடித்திருப்பீங்களா?” என்று கேட்டாள் கண்ணீரின் ஊடே.
“என்ன, என்ன சொன்னே, எம் பிள்ளை உன் பிள்ளைன்னு கண்ணன் எப்போ ஆனான்,,,, அவன் எப்போதுமே நம் பிள்ளைதான் நினவில வெச்சுக்கோ.... உன் பிள்ளைனுதான் நான் அடிச்சேன்னா நீ இத்தனை வேதனை படறே மது.... அப்போ கண்ணன் என் மகன் இல்லையா அவனிடம் எனக்கு உரிமை இல்லையா..... தத்து எடுத்திருக்கேன் அவனை... என் மகனா... நினவு இருக்குதா.... அப்படி இல்லேனாலும் அவன் மேல நான் எவ்வளவு பாசம் வெச்சிருக்கேன்னு உனக்குத் தெரியாதா மது.... பைத்தியமா நீ.....
இதுவே நம்ம பிள்ளையா உனக்கும் எனக்கும் பிறந்த மகனா இருந்திருந்தாலும் விஷமம் பண்ணினா நான் அவனையும் இப்படித்தான் அடித்திருப்பேன்.... அப்பறம் மனம் மாறி கொஞ்சி இருப்பேன்.... சரி அதுதான் போகட்டும், கண்ணன் என் மகன் இல்லைன்னு நீ நினைச்சா, அவன் உன் மகனும் இல்லைதானே மது.... நீ அப்படியா நினைக்கிற மது.... அவனை உன் உயிராதானே நினைச்சு உருகற.... இதான் நீ என்னை புரிஞ்சுகிட்ட லக்ஷணமாக்கும்... ரொம்ப நல்லா இருக்கு” என்று குமுறிவிட்டு கோபத்துடன் அந்தப்புறம் திரும்பி படுத்துக்கொண்டான்.


Saturday 29 September 2018

ENGIRUNDHO VANDHAAN - 9


சரி வர்ற சனிகிழமை என்னோட இங்க வந்து இருக்கணும்” என்று கேட்டுக்கொண்டார்.
“சரி ஆண்ட்டி” என்றாள் உதறலுடன். அவளது தேர்வு மும்மரத்தில் இதை திலீபிடம் கூறவில்லை அதிகம் பேசவும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அத்யாயம் பதினான்கு
தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை துடங்கியது வெள்ளியன்று. அடுத்த நாள் காலை கண்ணனையும் திலீப் வாங்கிக்கொடுத்த புதிய உடை அணிவித்து ரெடி செய்து தானும் எளிய காட்டன் புடவை அணிந்து கொஞ்சம் பழங்கள் மட்டும் வாங்கிக்கொண்டு கிளம்பினாள். விசாலம் கொடுத்த விலாசம் கண்டுபிடித்து சென்றுவிட்டாள்.
மிக பிரம்மாணடமான பங்களா அது. வாயிலில் காப்பானிடம் கூறினாள். அவன் உள்ளே கேட்டு பின் அனுமதித்தான். கார் பார்க்கில் நாயகம் அங்கிளை கண்டு வணங்கினாள். அவரும் நலன் விசாரித்தார்.
வரும்போதே கவனித்தாள்... மிகப் பெரிய தோட்டம். அதில் இல்லாத பூக்களே இல்லை எனலாம்.... மா பலா தென்னை வாழை என்று மரங்கள் சூழ்ந்து சோலை போல இருந்தது இருபக்கமும்.....
பின் உள்ளே காலடி எடுத்து வைத்தாள். மிகப் பெரிய அரண்மனை போலிருந்தது வீடு. தேக்கு மர தூண்களும் உயர் ரக சித்திரங்களும் லஸ்தர் விளக்குகளுமாக மிக அருமையாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.
உள்ளே ஹாலில் கால் பதித்தாள்..... பயத்தில் கை வியர்த்து ஈரமாகியது.....

“ஆண்ட்டி” என்று அழைத்தாள்.
“வா வா மது உள்ள வா..... வாடா குட்டிப் பயலே” என்று கண்ணனை வாங்கிக்கொண்டார் விசாலம்.
“உள்ளே குரல் கொடுத்து அவனுக்கு கொஞ்சம் பாலும் அவளுக்கு குளிர் பானமும் கொண்டு வரச் செய்தார்.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ஆண்ட்டி” என்று மறுத்தாள்.
“மூச், பேசாம உக்காரு மது..... எனக்கு இங்க வீட்டில தனியா ஒரே போர்.... அதான் உன்னையும் பயலையும் அழைத்தேன்.... இன்னிக்கி புல்லா என்கூடத்தான் இருக்கப் போறே” என்றார் அவர் உற்சாகமாக.
‘ஐயோ தீபுவிடம் கூறவில்லையே.... இங்கே கண்டு கோபித்துக் கொள்வாரோ என்னமோ’ என்று மேலும் பயந்தாள்.
“சகஜமாக உக்காரு பயமில்லாம பேசு மது” என்று ஊக்குவித்தார். அவள் புன்னகைத்தாள்.
“இதப் பார்த்தியா” என்று எடுத்து வைத்திருந்த ஒரு ஆல்பத்தை அவளிடம் நீட்டினார்.
அதில் திலீபின் குழந்தை பருவம்  துடங்கி இளமைகாலம் மற்றும் இப்போது உள்ளதுவரை பல படங்கள் பெற்றோருடனும் நண்பர்களுடனும் படிக்கும்போதும் என்று நிறைந்திருந்தன. அதை ஆவலுடன் பார்த்தாள் மது.

‘இவ்வளவு பெரிய குடும்பத்து ஒற்றை மகன் என்னைபோய் ஏன் விரும்பினார்..... பாவம் அவனது தாய்.... என்னென்னா கனவுகள் கண்டிருப்பார் அவரின் திருமணம் குறித்து’ என்று எண்ணம் எழுந்தது.
பலதும் பேசினார் விசாலம் இவள் மௌனமான புன்னகையோடு கேட்டிருந்தாள். அதில் பலவும் திலீபனின் சிறுவயது சுட்டித்தனங்கள் பெரும்பாலும் அவனைப் பற்றிய பேச்சுக்கள். கேட்க கேட்க இனித்தன மதுவிற்கு.
‘இவற்றை எல்லாம் என்னிடம் ஏன் கூறுகிறார்..... இவருக்கு எந்த அளவு எங்கள் உறவைப் பற்றி தெரியும்?’ என்று மது குழம்பினாள். விசாலாமோ ஒவ்வொன்றும் பேசும்போது அவளின் கண்களையும் முக பாவங்களையும் கூர்ந்து நோக்கி இருந்தார். அவரின் பலவருட அனுபவம் அவருக்கு பல உண்மைகளை உணர்த்தின.
‘இவள் பணத்திற்கு மயங்காதவள்..... இவளிடம் அன்பு நிறைந்துள்ளது.... பாசம் மிக்கவள்..... என் மகனை தன் வலையில் விழவைக்க இவள் முயன்றிருக்க மாட்டாள்..... பிறருக்காகவே வாழ்கிறவள் இவள்’ என்று தோன்றியது.
“கண்ணா இங்க வா” என்று கூப்பிட அவனும் தவழ்ந்து வந்தான்.
“பாட்டிகிட்ட வா” என்றார்.
“பாத்தி” என்றான் மழலையில்
“ஐயோ என்ன அழகா பாட்டின்னு சொல்றான்” என்று வாரி அணைத்துக்கொண்டார்.
மது மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தாள்.
“வா மது” என்று அழைத்துச் சென்று வீட்டைச் சுற்றி காண்பித்தார். வீடா அது அல்ல அல்ல அரண்மனை. மது பிரமித்தவள் மேலும் மிரண்டாள்.

‘இந்த வீட்டிற்கு நான் மருமகளாவதா.... ஐயோ என்னால முடியாது...’ என்று கலங்கினாள் அவளின் அனைத்து முக பாவங்களையும் கண்டுகொண்டே சிரித்துக்கொண்டார் விசாலம். அவர் மனதின் மதிப்பில் மேலே மேலே அவள் ஏறிக்கொண்டே போனாள்.
‘என் பிள்ளை எந்த தப்பும் செய்யவில்லை.... இவள் எனக்கு மருமகளாக தகுதி ஆனவள்தான்’ என்று தீர்மானித்தார்.
“திலீப் இப்போ சாப்பிட வந்துடுவான் மது.... நீ  கண்ணனுக்கு ஊட்டணும்னா ஊட்டீடு இப்போவே..... பிறகு நாம மூணு பேறுமா ஒண்ணா சாப்பிடலாம்” என்றார்.
‘என்னது அவர் வேற இப்போ வராரா போச்சு... நான் தொலைஞ்சேன்.. கோச்சுக்கப் போறார்’ என்று பயந்தாள்.

ஆயினும் அவர் சொல்லைத் தட்டாது குழைய பிசைந்த ரசம் சாதமாக கொண்டுவந்து கண்ணனுக்கு ஊட்டினாள். அவனும் சமத்தாக சாப்பிட்டான். அவன் வாய் துடைத்து இடுப்பில் வைத்துக்கொண்டு அவள் வெளியே வரவும் திலீப் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. விசாலம் ஒரு சுவாரஸ்யத்துடன் இருவர் முக பாவங்களையும் உணர்சிகளையும் கண்டு கொண்டிருந்தார். அவனுக்கு சொல்லப் பட்டிருக்கவில்லை மது வரப்போகிறாள் என்று. சாப்பிட கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்று மட்டுமே சொல்லி இருந்தார்.
வந்தவன் அதிர்ச்சியில் உறைந்துபோனான்.

‘சுவாதீனமாக என் மது என் வீட்டில் என் மகனை தூக்கிக்கொண்டு வாய் துடைத்துவிட்டபடி உள்ளே இருந்து வருகிறாளே..... என்ன நடக்கிறது இங்கே’ என்று பிரமித்து போனான்.
“என்ன, நீ இங்க எப்பிடி?” என்று கண்ணால் வினவினான்.
“அம்மாதான்” என்று அவளும் கண்களால் விசாலத்தை காண்பித்தாள்.
“என்னடா ராஜா சாப்பிடலாமா?” என்று கலைத்தார் விசாலம்.
“ஆங் என்னம்மா... ஒ... ஒ சாப்பிடலாம் மா” என்றான் தடுமாறி. அவர் நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டார்.
“வா மது” என்று அழைத்தார்.
“நீங்க சாப்பிடுங்க ஆண்ட்டி.... நான் அப்பறமா சாப்பிடறேன்” என்று தயங்கினாள்.
“ஒ முதல் ஒரு ரவுண்ட் நமக்கு பரிமாறீட்டு சாப்பிடறேங்கறியா... அதுவும் சரிதான்.... இன்னைக்கு உன் கையால பரிமாறி சாப்பிட்டதா இருக்கட்டுமே” என்றார் இயல்பாய்.
மது திலீப்பை பார்த்தாள். அதில் கோவம் இல்லை ஆச்சரியமும் அதிற்சியுமே கண்டவள் கொஞ்சம் தெளிந்தாள்.
“வா பரிமாறு” என்று அழைத்தான் அவனும் அவளை ஜாடையில்.
அவள் உடனே உவகையோடு முந்தானையை இழுத்து செருகிக்கொண்டு பரிமாற ஆரம்பித்தாள்.
தன் மனதுக்கினியவனுக்கும் அவன் தாய்க்கும் ஆசை ஆசையாக பரிமாறினாள்.
“உன் தட்டுலயும் வை.... பின்னோட வந்து உக்காரு  மது” என்றார் விசாலம்
“சரி” என்று அப்படியே செய்தாள்.

அவள் தட்டை அவன் பக்கத்துக்கு இடத்துக்கு நகர்த்தி விட்டார் விசாலம். ஒரு நொடி தவித்தாள் மது. பின் தயங்கியபடி அவனருகில் வந்து அமர்ந்தாள். அது போன்ற பதார்த்தங்களை அவள் கண்டது கூட இல்லை. மெல்ல சாப்பிட ஆரம்பிக்க அவள் தொண்டை குழியில் இறங்கவில்லை, பயம் அடைத்தது.
“சரியா சாப்பிடு... இது உன் வீடு” என்றார் விசாலம்.
“ஆங்!!!” என்று திலீப்பும் மதுவும் ஒன்றாக அதிர்ந்தனர்.
‘என்னவாயிற்று இன்று அம்மாவுக்கு’ என்று வியந்தான் திலீப். ஆயினும் தன்னருகில் தன் வீட்டில் தன் மது பரிமாறி அவனருகில் அமர்ந்து அவனோடு உண்பதில் அவனுக்கு எங்கோ பறப்பதைப் போன்ற ஆனந்தம்.
“ம்ம் சாப்பிடு” என்று ஜாடையில் ஊக்குவித்தான். அவளும் ரசித்து ருசித்து மெல்ல உண்ண ஆரம்பித்தாள்.
சாப்பிடும்போது டேபிளின் கீழே அவள் கையை வேறு பிடித்துக்கொண்டான் திலீப்.
“ப்ளிஸ் விடுங்களேன்” என்று கெஞ்சிப் பார்த்தாள்.
“உஹூம்” என்று அடம் பிடித்தான்.
சாப்பிட்டு முடித்து அவள் எல்லாவற்றையும் ஒழித்து போட உதவினாள். இயல்பாக காரியங்களை செய்வதை கவனித்துக்கொண்டார் விசாலம்.

வெற்றிலை தட்டுடன் வர “எனக்கு நீயே மடிச்சு குடுத்துடு மது” என்றார். பக்குவமாக பாக்கு வைத்து சுண்ணாம்புடன் மடித்து கொடுத்தாள். “எனக்கு?” என்றான் வேண்டுமென்றே திலீப்.
“அவனுக்கும் கொடுமா.... சீக்கிரமே அவனுக்கும் கல்யாணம் ஆகப் போகிறதே இனிமே போட்டுக்கலாம்” என்று சிரித்தார்.
மதுவிற்கு குப்பென்று வியர்த்தது.
‘ஒருவேளை பெண் பார்த்துவிட்டாரோ. அப்படி ஒரு வேளை அவர் என் தீபுவிற்கு பெண் பார்த்து மணமுடித்தாலும் இந்த வீட்டில் இந்த ஒரு நாள் நான் அவருடன் இருந்ததை எண்ணிக்கொண்டே நிம்மதியுடன் வரப்போகும் காலத்தை வாழ்ந்துவிடுவேன்’ என்று எண்ணி பெருமூச்சுவிட்டுக்கொண்டாள்.
அவனுக்கும் பக்குவமாக மடித்து கொடுத்தாள். அவளிடம் இருந்து எடுத்துக்கொண்டு வாயில் போட்டுக்கொண்டான் அவள் முகத்தையே பார்த்தவண்ணம்.
சிவந்துபோய் முகம் தழைத்தாள்.
“சோபாவில் உக்காரு மது.... இது என்ன கீழ உக்கார்ந்துகிட்டு” என்று அதட்டி மேலே அமரச் செய்தார்.
“நீ போட்டுகலையா மது?” என்று கேட்டார்.
“இல்லைமா பழக்கமில்லை” என்றாள்.

“மது உன் வீட்டுல யாரெல்லாம் இருக்கா?” என்று வேண்டுமென்றே கேட்டார் விசாலம். அவரை அதிர்ச்சியோடு ஏறிட்டான் திலீப். அவனை காணாதவர் போல மதுவின் முகம் பார்த்தார்.
“யாருமில்லை ஆண்ட்டி.... எனக்கு என் கண்ணன் மட்டும்தான் உலகத்திலேயே ஒரே துணை உறவு எல்லாம்” என்றாள் மெல்லிய குரலில்.
“ஒ அப்போ உன் கல்யாணம்?” என்று கேட்டார்.
“அதைப் பற்றி நான் பெரிதாக நினைக்கலை ஆண்ட்டி” என்றாள்.
“ஓஹோ அதுசரி..... உன் கண்ணை எனக்கு கொடுப்பியா?” என்று கேட்டார்
அவள் அதிர்ச்சியுடன் திலீப் முகம் கண்டு பின் விசாலத்தின் முகம் கண்டாள்.
“இல்லைமா ப்ளிஸ்... அவனை மட்டும் கேட்காதீங்க.... அவன் மேல நான் என் உயிரையே வெச்சிருக்கேன்.... அவனைவிட்டுட்டு என்னால வாழவே முடியாது” என்றாள்.
“சரி அப்போ நீயும் இங்கேயே வந்துடு” என்றார். அவள் மேலும் அதிர்ந்தாள். விட்டால் அழுதுவிடுவாள் போல இருந்தது முகம்.
போதும் தன் விளையாட்டு என்று நினைத்த விசாலம்

“அசடே உன்னைவிட்டு நான் உன் பிள்ளையை பிரிப்பேனா.... என்னைவிட்டு நீயும்தான் என் மகனை பிரிப்பாயா..... என்னால் மட்டும் என் மகனை பிரிந்து இருக்க முடியுமா..... உனக்கு உன் கண்ணனைப்போல தான் எனக்கும் என் மகன் திலீப்... அவன் மேல நான் என் உயிரையே வெச்சிருக்கேன் மது..... அதனால்தான் அவன் மனசுப்படி அவன் விரும்பிய பெண்ணையே அவனுக்கு மணமுடிப்பதுனு முடிவே செஞ்சுட்டேன்..... அதான் உன்னை வரவழைச்சேன்...... சும்மா கொஞ்சம் கேலி பண்ணலாமேன்னு தான் கொஞ்சம் ரெண்டு பேரையும் அதிர வெச்சேன்.... இப்போ சொல்லு என் மகனை பண்ணிக்க உனக்கு இஷ்டம்தானே..... என் மகன் சொன்னபடி கண்ணன்தான் என் முதல் பேரனா இருப்பான்..... அதுக்குப் பிறகு நீங்க பார்த்து இந்த கிழவி மேல இறக்கப்பட்டு இன்னொன்னு பெத்து குடுத்தா நானும் கண்ணனும் அந்தக் குழந்தையோட விளையாடிப்போம், இல்லையாடா கண்ணா” என்று அவனை வாரிக்கொண்டார்.
“அம்மா” என்று கட்டிக்கொண்டான் திலீப். அவன் தலையை சிலுப்பி விட்டார்.
“அம்மா” என்று அவர் மடி சாய்ந்து அழுதாள் மது.
“சீ அசடு, எதுக்கு அழுகிறே..... எல்லாம் தான் நல்லதே நடக்குதே..... கண்ணை துடை மா..... பாரு கண்ணன் உன்னையே பார்க்கிறான்.... அப்பறம் அவனும் அழுவான்” என்று மிரட்டினார்.
மது சிரித்துக்கொண்டே கண்களை துடைத்துக்கொண்டாள்.

“போங்க போய் திலீபோட ரூமை பார்த்துட்டு வாங்க... போடா கூட்டிட்டுபோ.... கண்ணன் என்கிட்ட இருக்கட்டும்” என்று அனுப்பினார். மதுவுக்கு வெட்கமாகியது “இருக்கட்டும் மா.... அப்பறமா பாத்துக்கறேன்” என்றாள்.
“போ மது, இல்லைனா என் மகன் என்னை கொன்னே போடுவான்” என்று சிரித்தார். இவை அனைத்தையும் கண்டு பேச்சு மூச்சற்று சமைந்திருந்தான் திலீப்.
‘என் அம்மாவா இது எப்படி இப்படி’ என்று ஆச்ச்சர்யபட்டான்.

வெட்கி முகம் சிவந்து நிற்கும் மதுவை கண்டவண்ணம் மாடிக்கு அழைத்துச் சென்றான். அங்கே உள்ளே சென்றதும் கதவை அடைத்துவிட்டு கதவின் மேல் சாய்ந்து கைகட்டி அவளையே பார்த்திருந்தான் கண் இமைக்காமல்.
“என்ன அப்படி பார்க்கறீங்க”
“எப்பிடீ இப்படி மாயம் செய்துட்ட எங்கம்மாவை” என்றான் அளவிலா சந்தோஷத்துடன்.
அவள் தலை கவிழ்ந்தாள்.
“மது” என்றான் தாபத்துடன் கைகளை விரித்துக்கொண்டு. அவள் ஓடி வந்து அவன் கைகளுக்குள் அடைக்கலாமானாள். அவளை இறுக்கிக் கட்டி அணைத்துக்கொண்டு அப்படியே நின்றான் மெய்மறந்து.
அவளை அணைத்துத் படுகையில் அமர்த்தினான். அவள் பயந்தாள்.
“என்னடி பயம்.... நான் அத்துமீருவேன்னு உனக்குத் தோணுதா?” என்றான்.
“இல்லை” என்றாள் மெல்ல.
“பின்ன?”
“என் மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லை” என்று கூறி அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
“அட உனக்கு இப்படி எல்லாம் கூட பேசத்தெரியுமா?” என்று அவளை அமர வைத்து அவள் மடியில் படுத்துக்கொண்டான்.
“என்ன இது நீங்க இப்படி செட்டில் ஆகீட்டீங்க.... அம்மா காத்திருப்பாங்க”
“ஆமா காத்திருப்பாங்க இவ கண்டா.... அதான் அம்மாவே நம்மளை அனுப்பிச்சாங்களாக்கும்.... போடி அசடு” என்றான்..
“ஹப்பா எவ்வளவு நிம்மதீ” என்று அமைதிகொண்டான். அவள் அவன் தலைமுடி வருடி விட்டாள். கண் மூடி ரசித்தான்.

அத்யாயம் பதினைந்து
விசாலத்துக்கு மனம் நிம்மதி ஆயிற்று. சந்தோஷமாக கண்ணனுடன் கொஞ்சிக்கொண்டு அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் திலீப்பும் மதுவும் கீழே இறங்கி வர “மது சீக்கிரமாவே கல்யாணத்த முடிச்சுடணும்..... நீ என்ன சொல்றே..... எம் பிள்ள நாளைக்கு கூட தாலி கட்ட ரெடிம்பான் அது எனக்கு தெரியும்” என்றார் சிரித்துக்கொண்டே.
மது நாணியபடி தலை கவிழ்ந்தாள்.
“உங்க இஷ்டம் அம்மா” என்றாள்.
“சரி நான் யார்கிட்டயானும் பேசணுமா மா இதப்பத்தி?” என்று கேட்டார்.
“பூரணி அம்மாதான் எனக்கு அம்மாபோல..... அவரிடம் சொன்னாபோதும்..... ரொம்பவே சந்தோஷப்படுவாங்க”  என்றாள்.
“சரி அப்பறம்?” என்றார்.
“வக்கீல் சார் கிட்ட...” என்று கூறி திலீப்பை பார்த்தாள்.
“அத நான் பாத்துக்கறேன்” என்றான் அவன்.

‘ஏதோ அழைத்தார்கள் சென்று பார்த்து வருவோம்’ என்று கிளம்பி வந்தவளுக்கு அன்றே கல்யாணமே தீர்மானமாகி முகூர்த்தம் குறிக்க ஏற்பாடுகள் ஆகும் என்று மது கனவிலும் நினைக்கவில்லை. ‘இதேல்லாம என்ன கனவா நிஜமா.... எனக்குத் திருமணமா அதுவும் என் மனதுக்கினிய திலீப்புடனா’ என்று திகைத்துப் போனாள். “நான் கிளம்பட்டுமா மா?” என்றாள் திலீப்பை கண்டபடி.
அவன் முகம் சுருங்கினான்.
“என்ன எங்க போகணும்..... இங்கேயே இருந்துடு அங்க எதுக்கு இனிமே தனியா”
என்றார் விசாலம்.


Friday 28 September 2018

ENGIRUNDHO VANDHAAN - 8


நான் ஏன் கேட்கக் கூடாது.... நாளைக்கு நமக்கு கல்யாணம் ஆகணும் ஞாபகம் இருக்கட்டும்என்று போட்டுடைத்தாள்.
என்னது, கம் அகேயின்... நான் உங்கள பண்ணிக்கப்போறதா யார் சொன்னா.... நோ வே.... அந்த எண்ணத்த நீங்களும் மாத்திக்கறது உங்களுக்கு நல்லதுஎன்றான் அதிர்ந்து போய் தன் தாயைக் கண்டு.
என்னம்மா இதெல்லாம்என்று குற்றம் சாற்றியது அவன் கண்கள். விசாலம் தலை குனிந்தார் .
நீங்க இல்லைனா எனக்கு நூறு மாப்பிள்ளை... எனக்கு வேற ஆளா இல்லை.... நீங்களும் உங்க பழங்கால புத்தியும்.... ஏதோ உங்கம்மா சம்பந்தம் பேச வந்தாங்களேன்னு நாங்களும் பேசினோம்... ஐ டோன்ட் கேர்என்று கத்தினாள்.

குட்.... ரொம்ப நல்லது ...அந்த எண்ணத்தோடவே நாளை காலை ஊரைப்பார்க்க  கிளம்புங்கஎன்று கும்பிட்டான். தன் தாயின் பக்கம் திரும்பிகூட பார்க்காமல் மேலே ஏறிச்சென்றுவிட்டான். மனதை அமைதிப் படுத்தித் தூங்கும்போது நள்ளிரவு தாண்டி இருந்தது.

அடுத்த நாள் காலையிலேயே தனது கோபத்தையும் ஆத்திரத்தையும் பல வழிகளில் காண்பித்தபடி ஆங்காரமாக கத்திவிட்டு தன் சாமான்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள் சுவாதி. அன்றும் காலை உணவு உண்டேன் என்று பேருக்கு உண்டுவிட்டு தாயிடம் ஒன்றும் பேசாது ஆபிஸ் கிளம்பிவிட்டான் திலீப். நொந்து போனார் விசாலம்.

‘அப்படி என்ன தப்பு பண்ணீட்டேன்... எம் பிள்ளை என்னை வெறுத்துட்டானே... அந்தப் பிடாரியை நானா வரச் சொன்னேன்.... அவளா வந்தா ஆட்டம் போட்டா... கிளம்பீட்டா.... அதுக்கு நான் என்ன செய்ய முடியும்’ என்று புலம்பி தீர்த்தார். மனம் அமைதி இல்லாமல் அலைபாய்ந்தது.

அதற்குமேலும் பொறுக்க முடியாமல் அன்று மாலை திலீப் வந்ததும் பேச முயன்றார்.
“என்னம்மா பேசணும்.... எனக்கு பின்னாடி நீ நாடகம் நடத்தறியே, என்னை உன் வழிக்குக் கொண்டுவர.... அதுமட்டும் நியாயமா மா இன்னும் என்னமா பேசணும்?” என்றான் ஆற்றாமையோடு.
“இல்லைடா ராஜா, நிஜம்மா சொல்றேன், என்னை நம்பு.... அன்னிக்கி என்னிக்கோ நான் உனக்காக ராவ் பகதூர் வீட்டுல சம்பந்தம் பேசினது உண்மை.... நீ வேண்டாம்னு மறுத்ததும் நான் மேற்கொண்டு எந்த ஸ்டெப்பும் எடுக்கலைபா.... சத்தியம்.... முந்தா நாளு அவங்களாவே தான் கூப்பிட்டு இங்க ஒரு வேலையா வரோம் வீட்டுக்கு வரப்போறோம்னு சொன்னாங்க.... மரியாதைக்காக சரி வாங்கன்னு சொன்னேன்..... வந்தவங்க இந்த பிசாசை நம்ம தலையில கட்டீட்டு போவாங்கன்னு நான் நிச்சயமா எதிர் பார்க்கலை..... அவளப் பார்த்து கொஞ்ச நேரம் பேசி பழகினதுலேயே எனக்கு அவ அடங்கா தனம் பார்த்து பிடிக்காம போயிடுச்சு..... உன்னை நான் அவளோட முடிச்சு போடவே இல்லைடா ராஜா என்னை நம்பு” என்று அழுதார்.
“சரி மா, விடு விட்டுத்தள்ளு” என்று அணைத்துக்கொண்டான்.

“நான் இனிமே உன்கிட்ட கேட்காம எதுவும் செய்ய மாட்டேன்டா... ஆனா நீ மட்டும் அம்மாகிட்ட பாராமுகமா இருக்காதேடா.... எனக்கு உன்னைவிட்டா யாருடா இருக்கா” என்று அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.
“ஐயோ அம்மா, என்னம்மா, நான் அப்படி எதுவும் செய்யலை.... போதுமா.... என்னை மன்னிச்சுடு.... ஏதோ அவ மேல இருந்த கோபம் உன்மேல காட்டீட்டேன்..... விடுமா வா சாப்பிடலாம்” என்று அழைத்துச் சென்று சாப்பிட வைத்தான்.
வேறே விஷயங்கள் பேசி சிரிக்க வைத்தான்.
“ராஜா நான் ஒண்ணு கேட்டா கோபிக்க மாட்டியே” என்று துடங்கினார்.
“இல்லைமா கேளு” என்றான்.
“யாரோ ஒரு பெண்ணோட நீ பேசிகிட்டிருந்தே னு அவ சொன்னாளே... யாருப்பா அது?” என்று கேட்டார்.
உடனே முகம் மென்மையாக “மதுதான் மா.... கண்ணனுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை.... அவளுக்கு அவனைவிட்டா இந்த உலகத்தில யாருமே இல்லை..... அதனால் கலங்கீட்டா... அவனை டாக்டர்கிட்ட காண்பிக்க வந்திருந்தா.... நான் வழியில பார்த்தேன்.... கூட இருந்து கூட்டிப் போய் காண்பிச்சுட்டு வந்தேன்.... அப்போதான் இவ எங்களைப் பார்த்தா.... பார்த்தவ மதுவையும் என்னையும் கேவலமா வேற பேசினா” என்றான்.
“ஒ அப்படியா” என்று கேட்டுக்கொண்டார். அது வரையிலும் பிள்ளை மறைக்காது தன்னிடம் உள்ளது உள்ளபடி உண்மையாக பேசுகிறான் எல்லாமும் கூறுகிறான் என்ற சந்தோஷம் உண்டானது.

அத்யாயம் பதிமூன்று
மனம் ஒரு வழியாக கொஞ்சம் அமைதி அடைந்தது. ‘மேலும் நல்லதே நடக்க வேண்டுமே, அந்தப் பெண்ணையே மனதில் வைத்திருக்கிறானே மகன்..... இதற்கு என்ன வழி’ என்று குழம்பிப்போய் கோவிலுக்குப் போகலாம் என்று தீர்மானித்தார் விசாலம்.
அன்று மாலை வினாயகத்தை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார். மனம் அமைதி பெற வேண்டினார். தன் பிள்ளையின் நல் வாழ்வுக்காக வேண்டிக்கொண்டார். கண்கள் கலங்கின. ஒருவேளை நிஜமாகவே அவள் நல்லவளோ என்று ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது.
அன்றோ கோவிலில் ஏகப்பட்ட கூட்டம்... பிரகாரம் சுற்றி வர யார் யாரோ இடித்து தள்ளி நெட்டியதில் கால் தடுமாற விழப் போனவளை யாரோ ஒரு பெண் தாங்கிப் பிடித்து அமர்த்தினாள். கருங்கல் தூணில் கால் கட்டைவிரல் தாக்கியதில் ரத்தம் லேசாக வெளிப்பட்டு கரைகட்டியது. அங்கேயே கோவில் மேடையில் அமர வைத்து தண்ணீர் கொண்டு வந்து புகட்டினாள் அந்தப் பெண்.
“ரொம்ப தாங்க்ஸ் மா” என்றார்.
“இருக்கட்டும் மா.... எங்கியானும் அடிபட்டுதா மா, வலிக்குதா..?” என்று கேட்டாள் ஆதுரத்தோடு அந்தப் பெண்.
“கால் கட்டைவிரல்லதான்...” என முகம் சுணங்கினார் வலியில் விசாலம்.
“ஒ அப்படியா” என காலை தூக்கி சோதித்தாள். “லேசான அடிதான் ஆனா நகம் கொஞ்சம் பிஞ்சிருக்கு, அதான் ரத்தம் வருதுமா. எங்க வீட்டுக்கு வறீங்களா... கட்டு போட்டு அனுபறேன்: என வினவினாள் பிரியமாக.
‘எத்தனை நல்ல பொண்ணு’ என்று எண்ணிக்கொண்டார் விசாலம்.
“இல்லம்மா பரவாயில்லை, போற வழியில்தான் எங்க குடும்ப டாக்டர்... அவர்ட பாத்துகிட்டு போறேன். ரொம்ப தாங்க்ஸ் மா” என்றார் அதுரமாக.

“சரி இருங்கம்மா, நான் தரிசனம் முடிச்சுட்டு வந்து கார் வரைக்கும் கூட்டிகிட்டு போய் விடறேன்” என சென்றாள். விசாலம் பேசாமல் பிரகாரத்திலேயே அமர்ந்தார். சிறிது நேரத்தில் கொழுக் மொழுக் என்ற ஒரு குழந்தை தவழ்ந்து இவளிடம் வந்தது. இவள் மடியில் கை ஊனி எழ முயற்சித்தது.

“அட குட்டி யாரு நீ.... உங்கம்மா எங்கேடா குட்டிப் பையா?” என்று மடியில் தூக்கி வைத்துக்கொண்டார். ‘யார் குழந்தையோ கிருஷ்ண விக்ராகமாட்டமா இருக்கு’ என்று கொஞ்சி முத்தமிட்டார். அதற்குள் அவனைத் தேடிக்கொண்டு வந்துவிட்டாள் அந்தப் பெண்.

“ஒ உங்க கிட்ட இருக்கானா.... சரியான வாலு.... நான் பிரசாதம் வங்கிக்க நின்ன நேரத்துல என்னை ஏமாற்றிட்டு இங்க வந்துட்டான்” என்று சிரித்தபடி அவனை வாரி அணைத்துக்கொண்டாள். செல்லமாக திட்டவும் செய்தாள்.

“உம்பிள்ளையா, அப்போவே உங்கிட்ட இல்லியே? என்றார் அவர்.
“ஆமா, பக்கத்துவீட்டு அக்காவோட கோவிலுக்கு வந்தேன்... இவன் அவங்ககிட்ட இருந்தான்” என்றாள்.
“இப்படிதான் அம்மாவ தவிக்க விடறதா... நான் எவ்வளோ பயந்து போனேன் டா கண்ணா” என்று அவன் மூக்கை செல்லமாக நிமிண்டினாள். அது கெக்ககே என்று சிரித்து மயக்கியது.
“மாயக்கண்ணன் டா நீ” என்று சேர்த்தணைத்துக்கொண்டாள்.
இதை அனைத்தையும் கண்ட விசாலத்திற்கு மனம் ஏங்கியது.
‘நானும் என் பேரப் பிள்ளையை எப்போது இப்படி எடுத்துக் கொஞ்சுவேனோ’ என்று.
“இப்போ கொஞ்சம் தேவலையா ஆண்ட்டி?” என்று கேட்டாள்.
“ஆமாம் மா உனக்கு ரொம்ப தாங்க்ஸ்... உன் பேர் என்னம்மா?” என்று கேட்டார்
“மதுவந்தி ஆண்ட்டி” என்றாள்.
‘மதுவா! இவள் அவளோ,’ என்ற சந்தேகம் தோன்றியது.
“போலாமா மா, உன் வீடு எங்க.... நான் உன்னை உங்க வீட்டுல விட்டுட்டு போகட்டுமா?” என்று கேட்டார்.
“வேண்டாம் ஆண்ட்டி.... நான் போய்குவேன்... அக்கா வேறே காத்திருக்காங்க.. வீடு பக்கம்தான்.... நான் கார் வரை வரேன் வாங்க” என்று கண்ணனை இடது தோளில் சாய்த்துக் கொண்டு வலது கையால் விசாலத்தை அணைத்து கூட்டிச் சென்றாள்.

கார் அருகே வர நாயகம் பார்த்துவிட்டு “என்னம்மா?” என்று ஓடி வந்தார்
“ஒண்ணுமில்ல நாயகம், கால்ல கொஞ்சம் அடிபட்டுடுச்சு, அவ்ளோதான்” என்றார் விந்தியபடி வண்டியில் ஏறியபடி.

“என்ன நாயகம் அங்கிள். எப்படி இருக்கீங்க... என்னை நினைவு இருக்கா?” என்று புன்னகையோடு கேட்டாள்.
“ஆமாம் மா நல்லா நினைவு இருக்கு... நான் நல்லா இருக்கேம்மா நீ எப்படி இருக்கே?” என்று கேட்டார் அவர்.
“நானும் நல்லா இருக்கேன் அங்கிள்” என்றாள்.
“ஏன் நாயகம் உனக்கு இவளத் தெரியுமா?” என்று கேட்டார் விசாலம்.
அவரின் சந்தேகம் இப்போது தீர்ந்தே போய்விட்டது. ஆனாலும் தெரிந்துகொள்ள வேண்டி கேட்டார்.
“இவங்கதான் மா நம்ம தம்பிக்கு அன்னிக்கி மழை நாளுல அடைக்கலம் தந்தவங்க” என்றார்.
மது “ஏன் அங்கிள் இவங்க....?” என்று இழுக்க
“இவங்கதான் மா அன்னிக்கி நீங்க உதவி செஞ்சீங்களே திலீப் சாருடைய தாயார்”  என்றார் நாயகம்.
மதுவிற்கு தூக்கிவாரிப் போட்டது இவர் திலீபனின் தாயா.... ஐயோ கடவுளே என்ன நினைத்தாரோ.... என்னைப்பற்றி திலீப் கூறி இருப்பாரோ என்னமோ” என்று பயந்தாள்.
‘ஹ்ம்ம்’ என்று பெருமூச்சு எறிந்துவிட்டு காரில் மெல்ல ஏறி அமர்ந்தார் விசாலம்.
“வரேன் மதுவந்தி, வீட்டிற்கு வா ஒரு நாள்... இதுதான் விலாசம்” என்று தன் பேகிலிருந்து கார்டை எடுத்துத் தந்தார்.
“கண்டிப்பா வரேன் ஆண்ட்டி” என்றாள்.
“த பாரு, வரும்போது இந்த சுட்டிப் பயலையும் கூட்டிகிட்டு வா” என்று கண்ணனின் கன்னத்தை வழித்து முத்தம் குடுத்தார் விசாலம்.
“சரி” என்றாள்.
“போலாமா நாயகம்?” என அவரும் சரியென வண்டியை எடுத்தார்.

‘இந்தப் பெண்தான் அந்தப் பெண்ணா பார்த்தாள் ரொம்பவே நல்லவளா இருக்கா... நான் யாருன்னு தெரியாதபோதும் தானே வலிய வந்து உதவினாளே.... திலீபன் சொன்னது உண்மைதான்.... ஆனாலும் அந்தக் குழந்தை... எப்படி.... மணமாகாமல் பிறந்ததா... இல்லை கணவன் இறந்துவிட்டானா’ என்று குழம்பினாள்.
“நாயகம் இந்தப்பொண்ணு...” என்று இழுத்தார்.
“ஆமாங்க மா அதே மது தானுங்க..... ரொம்ப நல்ல மாதிரிங்க” என்று அவரும் புகழ்ந்தார். “ரொம்ப உதவி குணமுங்க” என்றார்.
“உனக்கெப்பிடித் தெரியும்?” என்று கேட்டார்.
“அன்னிக்கி நம்ம தம்பிக்கு உதவிச்சுங்களே இன்னிக்கி உங்களுக்கு உதவிச்சு.... பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தானுங்களே” என்றார் அவர் அது சரிதான் என்றார் விசாலம்.
மனம் குழம்பியது. வீட்டிற்குச் சென்று மகன் வந்திருப்பதைக் கண்டார்.
“என்னம்மா இத்தனை நேரம் எங்க போயிருந்தே, கால்ல என்னாச்சு, ஏன் இப்படி நடக்கற” என்று பதறினான் கவலையாக.
“கோவிலுக்குதான் போனேன் வேறெங்க போவேன்.... என் மனக் குமறலை அங்க போய் கொட்டீட்டு வந்தேன்... ஒண்ணுமில்ல கொஞ்சம் கும்பல்ல இடிச்சு அடிபட்டுடுச்சு. கட்டுபோட்டாச்சு டாக்டர்ட” என்றார்.
“ராஜா இங்க வா, எம் பக்கத்துல உக்காரு” என்றார்.
“என்னம்மா?” என்றான் பயந்தபடி அம்மா திரும்பவும் மதுவைப் பற்றி ஏதேனும் இழிவாக பேசுவாளோ என்று.
“அந்தப் பொண்ணு மது..... அவளப் பற்றி என்னமோ சொல்றேன்னு சொன்னியே சொல்லு” என்றார்.
“அம்மா!” என்றான் ஆச்சர்யமாக.
“சொல்லுடா” என்றார்.
“அம்மா மதுவுக்குனு யாருமே இல்லை இந்த உலகத்துல... என்று ஆரம்பித்து மொத்தக் கதையும் சொல்லி முடித்தான்.
கண்கள் ஆச்சர்யத்தில் விரிய ‘இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணா’ என்று பிரமித்தார் விசாலம்.
“நீ சொல்றதெல்லாம் நிஜமாடா ராஜா?” என்று கேட்டார் நம்ப முடியாமல்.

“ஆமாம் மா நீ கேட்டியே அவ சொன்னா நம்பீடறதானு.... அப்படி நானும் முழுமையா அவளை மட்டுமே நம்பி பேசலை மா..... அந்த வக்கீல் கிட்டதான் மொதல்ல உண்மைய தெரிஞ்சுகிட்டேன்..... பின் பூரணி அம்மாகிட்டயும் போய் கேட்டு உள்ளது உள்ளபடி தெரிஞ்சுகிட்டேன்.... அப்போகூட அவ மேல ஏதானும் தப்பிருக்கும்னு நினைத்து கேட்கல, அவளோ தன்னைப் பற்றி ஒண்ணுமே சொல்லிக்கறதில்லை. அவங்க மூலமாவானும் தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன்.
கடைசீயாகதான் மதுவிடம் பேசினேன்.....
தன்னால் யாரையும் திருமணம் செய்துகொள்ள முடியாதுனு தான் அழுதா..... கண்ணனுக்கு தாயா இருக்கறது மட்டும்தான் அவ வாழ்க்கைன்னு சொன்னா..... நாந்தான் பேசி பேசி கரைச்சேன்..... இன்னமும் அவ முழுமையாக மனம் மாறலை..... நீ என்ன சொல்லுவியோ.... கண்ணன் மேல இருக்கிற அன்பு முக்கியத்துவம் மணமானா மாறீடுமொன்னு இன்னமும் அவளுக்குள்ளே பயம் இருக்கு... அதான் தயங்கறா” என்றான்.

இப்போது விசாலத்தின் கண்கள் பனித்தன. ஒரு பெண்ணுக்கு வாழ்வில் என்னெல்லாம் சோதனைகள் கடவுளே என்று எண்ணிக்கொண்டார்.
“ஹ்ம்ம் சரி ஏண்டா அவ நம்பர் இருக்கா உன்கிட்ட?” என்று கேட்டார்
“ஏன்மா எதுக்கு?” என்றான் பயந்துபோய்.
“ஏண்டா, நான் உனக்குத் தெரியாம பேசி கெடுத்துடுவேன்னு பயப்படறியா?” என்றார் அடிபட்டவர் போல.
“இல்லைமா அப்படி இல்லை” என்றபடி அவளின் நம்பரை கொடுத்தான்.
“நீ போ, உன் வேலையப் பாரு” என்றார்.
திலீப்புக்கு இரவு தூக்கம் போனது ‘அம்மா எல்லாமும் ஏன் கேட்டார், இப்போது நம்பரை ஏன் வாங்கினார்.... என்ன நடக்கின்றது’ என்று குழம்பினான்.
அடுத்த நாள் அவன் வெளியேறியபின் விசாலம் மதுவின் நம்பரை அழைத்தாள். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மது எடுத்தாள்.
“ஹெலோ சொல்லுங்க யாரு?” என்றாள்.
“மது இது நாந்தான் விசாலம், திலீபன் அம்மா பேசறேன்” என்றார்.
மதுவிற்கு தூக்கிவாரிப் போட்டது “சொல்லுங்க ஆண்ட்டி, கால் எப்பிடி இருக்கு?” என்று கேட்டாள் திணறிக்கொண்டு.
“நான் நல்லா இருக்கேன்... நீ எப்பிடி இருக்கே.... சுட்டிப் பயல் எப்பிடி இருக்கான்.... எப்போ நம்ம வீட்டுக்கு வரே?” என்று கேட்டார்.
“கண்டிப்பா வரேன் இப்போ நான் கிளாசிலே இருக்கேன் பேச முடியாது..... அடுத்த அரை மணியில கிளாஸ் முடிஞ்சுடும்... நானே உங்கள இந்த நம்பர்ல கூப்பிடட்டுமா ஆண்ட்டி?” என்றாள் மரியாதையுடன்
“ஒ அப்படியா, சாரி எனக்கு தெரியல.... டிஸ்டர்ப் பண்ணீட்டேன்... நீ அப்பறமா கூப்பிடு, சரி வைக்கறேன்” என்று கட் செய்தார்.
பின்னோட் அரை மணியில் மது அழைத்தாள்.
“சொல்லுங்க ஆண்ட்டி” என்றாள்.
“அதான் நீ எப்போ இங்கே வரே?” என்று கேட்டார்.
“வரேன் ஆண்ட்டி... கூடிய சீக்கிரம்” என்றாள். “இன்னும் நாலு நாள்ள எங்க ஸ்கூல் தேர்வுகள் முடிஞ்சு லீவ் விட்டுடுவாங்க ஆண்ட்டி.... அப்போ வரேன்... நான் ப்ரீதான்” என்றாள்.


Thursday 27 September 2018

ENGIRUNDHO VANDHAAN- 7

சரி வாங்கஎன்றார் விசாலம் தயக்கமாக. ‘ஐயோ திலீப்புக்கு தெரிஞ்சா என்னை மேலும் வெறுத்துடுவானேஎன்று பயந்தான். ஆனால் அந்தப் பெண் அழகானவள் அறிவானவள் என்று கேள்வி ஒருவேளை தன் மகன் அந்தப் பெண்ணை பார்த்து மனம் மாற மாட்டானா என்று ஆசை.
அவர்கள் மதியம் வந்து அமர்ந்து பேசி விருந்து உண்டுவிட்டு எங்கப் பெண்ணை இங்க ரெண்டு நாள் விட்டுட்டு போகிறோம் சம்பந்தியம்மா..... அவளுக்கு ஊட்டி எல்லாம் சுற்றி பார்க்கணும் னு ஆசை..... எங்களுக்கு தலைக்குமேல வேலை..... அதான் திலீப் தம்பி இருக்குதே, ரெண்டு பேரும் சுற்றி பார்க்கட்டும்... மனசு விட்டு பேசி பழகட்டும்.. என்ன சொல்றீங்கஎன்றுவிட்டு பதிலை எதிர் பார்க்காமல் சென்றுவிட்டனர்.
சரிஎன்றார் அரை வாயால் விசாலம். அவள் சுவாதிக்கு ஒரு கெஸ்ட் ரூமை ஒழித்து ஏற்பாடு பண்ண சொல்லிவிட்டு திலீப் வந்தால் என்னாகுமோ என்று பயந்தபடி காத்திருந்தார்.
அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பினான் திலீப். வாச ஹாலிலேயே ஒரு அழகிய பெண் ஒயிலாக அமர்ந்திருப்பதைக் கண்டு யாரிவள் என்று தோன்றி உள்ளே வந்தான்.

அம்மாஎன்று அழைத்தான்.
பயந்தபடி தயக்கமாக வா பா திலீப்.... ரொம்ப வேலையா... என்ன குடிக்கற?” என்று விசாரித்தார்.
எனக்கு இப்போ ஒண்ணும் வேண்டாம் மா” ‘இது யாரு?’ என்று கண்களால் வினவினான்.
திலீப் இதப் பார்த்தியா, இதுதான் சுவாதி, நம்ம ராவ் பகதூர் சிங்காரம் பிள்ளை இல்லை அவர் மகள்..... இங்க ஊர் சுற்றிப் பார்க்கன்னு வந்திருக்கா.... ரெண்டு நாள் நம்ம வீட்டுல தான் தங்கி இருப்பா..... உனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே....?” என்று கேட்டார்.
இப்போதானே வந்திருக்கா போக போகத்தானே தெரியும் ப்ராப்ளமா இல்லையான்னுஎன்று மனதினுள் நினைத்துகொண்டான்.
ஒரு அரைப் புன்னகையுடன் அதெல்லாம் ஒண்ணுமில்லை.... ஷீ இஸ் மோஸ்ட் வெல்கம்என்றான். “ஹெலோஎன்று கூறினான் அவளைக்கண்டு.
ஹை திலீப், எப்படி என் சர்ப்ரைஸ்?” என்று கேட்டாள்.
என்ன சர்ப்ரைஸ்?” என்றான்.
அதான் அவ திடீர்னு வந்திருக்காளே அதைச் சொல்றாஎன்று பூசி மெழுகினார் விசாலம்.
நீ போ பா, போய் பிரெஷ் பண்ணிக்கிட்டு வாஎன்றார்.

திலீப் நாளையும் மறுநாளும் நீங்க புல் டே என்னோடுதான் இருக்கணும்...... எனக்கு இந்த ஊட்டிய சுற்றிக் காண்பிக்கணும் டியர்என்றாள் கொஞ்சலாக அவன் மீது ஈஷாத குறையாக.
சாரிங்க, எனக்கு தலைக்குமேல வேலை இருக்கு..... வர்ற வாரம் எங்க ஆனுவல் மீட்டிங் வேற..... அதற்கு தயார் பண்ணனும்.... அதனால நான் எங்க டிரைவர் நாயகம் அங்கிள காரோட இங்க விட்டுட்டுப் போறேன்.... அவர் உங்களை அழச்சுகிட்டு போய் ஊரச் சுத்தி காண்பிப்பார்.... அவருக்கு இங்க எல்லா இடமும் அத்துப்படிஎன்று நழுவிக்கொண்டு மேலே சென்றுவிட்டான்.
என்ன ஆண்ட்டி இது, நான் டிரைவர் கூட போகிறதா.... அதுக்கா எங்கப்பாம்மா என்னை இங்க விட்டுட்டு போனாங்க?” என்றாள் கொஞ்சலும் எரிச்சலுமாக.
அவனுக்கு வேலை அப்படிமா... நான் பேசிப் பார்க்கறேன்என்றார்.

இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தார். மெல்ல மேலேறி திலீபன் அறைக்குப் போய்
ஏன் பா ராஜா, அந்தப் பிள்ள ரெண்டு நாளைக்குத்தானே வந்திருக்குது.... அதுல நாள ஒரு நாளானும் அவகூட கொஞ்சம் போய் சுற்றிட்டு வரக்கூடாதா?” என்று கேட்டார் தயங்கியபடி.
ரொம்ப கஷ்டம் மா..... அதுமட்டும் இல்லை அவ பேசறதும் மேலே விழுந்து ஈஷறதும் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலைமாஎன்றான்.
என்னக்காக ராஜாநாளை அரை மட்டும்... நாள மதியம் சாப்பிட வந்துட்டு அவ கூட போயிட்டு வா பாஎன்றார்.
மறுக்க முடியாமல் சரிஎன்றான் அரை மனதாக. எரிச்சல் வந்தது.
இப்போ உனக்காக ஓகே சொல்றேன்.... அதுவும் நாள அரை நாள் மட்டுமே..... இனிமே என்னைக் கேட்காம என்னை சம்பந்தப்படுத்தி எந்த வாக்கும் குடுக்காதே மாஎன்றான்.
சரிப்பாஎன்றார் விசாலம் இந்த அளவானும் ஒப்புக்கொண்டானே என்று.

அன்று இரவு மூவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டுவிட்டு திலீப் குட் நைட் என்று கூறி மேலே சென்றுவிட அவனை முறைத்தாள் சுவாதி. ‘ஆனாலும் ரொம்பத்தான் தெனாவட்டு.... என் காலில விழ வைக்கிறேன் டா உன்னைஎன்று கூறிக்கொண்டாள்.
உடல் அழகை பளிச்சிட்டு காட்டும் ஒரு நைட்டியை அணிந்து கொண்டிருந்தாள். அதனுடனேயே மேலே ஏறிச்சென்றாள். அவன் அறைக்கதவை தட்ட தன் மடி கணினியில் ஏதோ முக்கியமாக வேலை செய்து கொண்டிருந்தவன் இந்த வேளையில் யார் என்று எண்ணி கதவைத் திறந்தான். அதிர்ந்தான்.

என்ன வேணும் சுவாதி.... இங்க எங்க இந்த நேரத்தில?” என்றான் எரிச்சலான குரலில்.
தூக்கம் வரலை அதான் உங்ககிட்ட கொஞ்சம் பேசிகிட்டு இருக்கலாம்னு வந்தேன்என்று அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து அவன் பெட்டில் சட்டமாக அமர்ந்துகொண்டாள். அவளும் அவள் உடையும் போஸும் பேச்சும் அவனுக்கு சகிக்கவில்லை.
எனக்கு முக்கியமான வேலை இருக்கு.... காலைக்குள்ள இதை முடிச்சு எடுத்துகிட்டு போகணும்.... நாள காலை மீட்டிங் இருக்கு.... சோ ப்ளிஸ்என்று கதவை காட்டினான்.
அப்போ என்னை கெட் அவுட் னு சொல்றீங்களா?” என்றாள் ஆத்திரமாக.
அப்படி சொல்லலை சுவாதி..... டிஸ்டர்ப் பண்ணாதீங்க னு சொல்றேன்..... எனக்கு வேலை இருக்குஎன்றான் அமைதியாக.

அவள் நோக்கம் தெள்ள தெளிவானது. அம்மாவும் இதில் கூட்டா என்று குமைந்தான்.
அவள் காலை தரையில் உதைத்துக்கொண்டு வெளியே சென்றாள். ஹப்பா என்று கதவை மூடி தாளிட்டான்.
கஷ்டம் டா சாமி என்று தலையில் அடித்துக்கொண்டான். அவன் மனம் அவனையும் அறியாமல் மதுவிடம் சென்றது. பெண்மையின் மொத்த உருவம் என் மது, அவள் நாணமும் அவள் முகச் சிவப்பும் அவள் ஒதுக்கமும் ஒழுக்கமும் என்னை ஈர்த்தது எனலாம்
இப்படியா மேலே வந்து விழுவாள் என் மதுஎன்று தோன்ற. ‘சீ யாரை யாரோடு நான் ஒப்பிடுகிறேன்..... என் மது ஒரு தேவதை.... இது அம்மா சொல்வார்களே அதுபோல கழிசடைஎன்று கூறிக்கொண்டான். பின் தன் வேலைகளை முடித்து படுத்தான். மது கனவில் வந்து தாலாட்டினாள். சுகானுபவமாக அதை அனுபவித்தபடி உறங்கிப்போனான்.

அடுத்த நாள் அதிகாலை எழுந்து அவன் வழக்கம் போல உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தான். அங்கேயே தன் காபி கப்புடன் வந்துவிட்டாள் சுவாதி அதே நைட்டியில் .
அட ராம காலை சுற்றின பாம்புஎன்று எண்ணிக்கொண்டான். அவளை கவனியாததுபோல அவன் தன் பயிற்சிகளை தொடர்ந்தான்.
குட் மார்னிங் திலீப்என்றாள்.
குட் மார்னிங்என்றான்.
என்ன பண்றீங்கஇதெல்லாம் தினமும் செய்வீங்களா.... அதான் நீங்க அவ்வளவு ஹேன்ட்சமா இருக்கீங்க.... நைஸ் பாடிஎன்றாள். அவனுக்குக் கூச்சமாகியது.
கர்மம் டா சாமிஎன்று எரிச்சல்பட்டு பதில் ஏதும் கூறாமல் தனது அறைக்குள் நுழைந்து மூடிக்கொண்டு வியர்வை ஆறக் காத்திருந்து குளிக்கச் சென்றான். பின் ஆபிஸ் உடையில் தயாராகி கீழே இறங்கி வந்தான்.
வாவ் யு லுக் மார்வலஸ்என்றாள்.
தாங்க்ஸ்என்று முனகினான். அவன் அன்று மிகவும் நன்றாக இருந்தான் தான். டார்க் நேவி ப்ளூ பேண்டும் அதனுடன் லைட் சந்தன கலர் ஷர்ட் இன் செய்து அடர் சிவப்பும் நேவி ப்ளூவும் கலந்த டை அணிந்திருந்தான். அதே நேவி ப்ளூ கோட் அவன் கையில் மடிந்து தொங்கியது. அவசரமாக காலை உணவை உண்டுவிட்டு
அம்மா நான் கிளம்பறேன்.... முடிஞ்சா தான் லஞ்சுக்கு வருவேன்... நிறைய வேலை இருக்கு.... இவங்கள நாயகம் அங்கிளோட அனுப்பு.... என்னால இன்னிக்கி முடியும்னு தோணலைஎன்றுவிட்டு ஓடியே விட்டான்.
அதென்ன நான் யாருகூட போகணும்னு அவர் யாரு தீர்மானிக்க?” என்று கீச்சுக் குரலில் அலறினாள்.
அம்மாடி இந்தப்பெண் என் வீட்டிற்கு மறுமகளா வந்தா எம் பாடு திண்டாட்டம் தான்என்று விசாலமே பயந்து போனார்.
சரி மா அவன் வேலை அவனுக்கு... உனக்கு நாயகத்தோட போகப் பிடிக்கலேன்னா விட்டுடு.... வீட்டிலேயே இரு.... இல்லைனா தனியா கார் எடுத்துகிட்டு போயிட்டு வாஎன்று கூறினார்.
இதுக்காகவா  வரச்சொன்ணீங்க?” என்று ஆத்திரமானாள்.
நான் வரச்சொல்லலையே மா.... உங்கப்பா தான் கூப்பிட்டு நாங்க வரோம்னார் சரின்னேன்..... உன்னை இங்க விட்டுட்டுப் போக போறதாகவும் அவரேதான் சொன்னார் நான் சரின்னேன்.... அவ்ளோதான்என்று கூறிவிட்டு தன் அறைக்குள் போய் அமர்ந்து கொண்டார். ‘அம்மாடி சரியான அடங்காப்பிடாரிஎன்று நினைத்துக்கொண்டார்.

அத்யாயம் பன்னிரண்டு
வேறு வழியின்றி டிரைவருடன் கிளம்பினாள் சுவாதி. ஊரை சுற்றிவிட்டு அங்கே இங்கே என்று கண்டதையும் வாங்கி கொறித்துவிட்டு வினாயகத்தை உண்டு இல்லை என்று செய்துவிட்டு மாலை நேரம் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் காரில். அப்போது அங்கே திலீப் யாரோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டாள்.
ஹே டிரைவர், அது திலீப் தானே?” என்று கேட்டாள்.
ஆமா மேடம்என்றார் அவர் மரியாதையாக.
இங்க என்ன பண்றாரு,  யாரு அந்தப் பொண்ணு?” என்றாள் ஆத்திரமாக.
எனக்குத் தெரியாது மேடம்என்றார்.
உனக்கா தெரியாது, எல்லாம் உள்ளூட்டு.... கண்டவளோட ஊர் சுத்த முடியுது.... என்கூட ஊர் சுற்றிப் பார்க்க முடியவில்லை..... இதானா அவர் சொன்ன முக்கியமான ஆபிஸ் வேலை.... இருக்கட்டும் பேசிக்கிறேன்என்று காரை நிறுத்தச் சொல்லி அவனருகே போய் நின்றாள்.

ஹை திலீப்என்று வேண்டுமென்றே அவனிடம் ஈஷிக்கொண்டு நின்றாள். கூட நின்ற பெண்ணுக்கு சங்கடமானது.
நீங்க எங்க இங்க, முக்கியமான ஆபிஸ் மீட்டிங்னு அம்மாகிட்ட பொய் சொல்லீட்டு இவங்க கூட சுத்தறீங்களா?” என்று கலாட்டா போல நிஜமாகவே வயிறு எரிந்து கேட்டாள் ஏளனமாக அந்தப் பெண்ணை பார்த்தபடி.
ஆனாலும் இந்தப் பெண்ணு அழகாவே தான் இருக்கா... அதான் இந்த ஆளு மயங்கீட்டான் போல..... என்னைவிடவா அழகுஎன்று நினைத்துக்கொண்டாள் உள்ளூர.
இவங்க எனக்கு ரொம்ப வேண்டியவங்க..... என் மீட்டிங் முடிஞ்சு கிளம்பும்போது எதிர்பாராம இங்க சந்திச்சேன் பேசிகிட்டிருக்கேன் நீங்க இங்க எங்க வந்தீங்க?” என்றான் எரிச்சலுடன்.
“என்னைத்தான் நீங்க உங்களோட ஊர் சுத்திப் பார்க்க கூட்டிப் போகலையே.... அதான் நானே சுத்தலாம்னு வந்தேன்.... இப்போ வீட்டுக்குதான் போறேன்.... நீங்களும் வீட்டுக்கா... அப்போ நான் உங்ககூடவே வந்துடறேனேஎன்று ஓட்டினாள்.
இல்லை எனக்கு இன்னும் வேலை இருக்கு..... முடிஞ்சு வீடு திரும்ப இன்னும் சில மணி நேரம் ஆகும்.... நீங்க போங்க சுவாதிஎன்று அனுப்பினான்.
ஆமா ரொம்ப வேண்டப்பட்டவங்களோட முக்கியமான வேலை இருக்கும்தான்என்றாள் இழிவாக அந்தப்பெண்ணைப் பார்த்தபடி.

யாரு என்னஎன்று ஒன்றும் கேட்கவில்லை அந்தப் பெண்.
அவனே மது அது யாருன்னு தோணுதா.... ஒண்ணுமே கேட்கலியே?” என்றான்.
அவள் எனக்கு தெரிய வேண்டியதா இருந்தா நீங்களே சொல்லுவீங்களே தீபுஎன்றாள்.
தட்ஸ் மை கார்ள்என்று எண்ணிக்கொண்டான்.
அவ எங்களுக்கு தெரிஞ்ச பாமிலி வீட்டுப்பொண்ணு.... இங்க ரெண்டு நாளு சீசன் டைம்னு சுத்திப் பார்க்க வந்திருக்கா..... எனக்கு ஒண்ணும் பிடிக்கலை.. ரொம்ப மாடெர்ன் டைப்.... எல்லாம் அம்மா ஏற்பாடு..... அவளும் அவ உடையும் பேச்சும் சிரிப்பும் ரொம்ப ஈஷரா மது... அசிங்கமா இருக்குஎன்றான் எரிச்சலாக.
மது சிரித்துக்கொண்டாள். ஆனால் உள்ளூர பெருமை கொண்டாள் என் தீபு உத்தமன்என்று.
என்னடி உள்ள செகண்ட் ட்ராக் என்னமோ ஓடுது?” என்று கேட்டான்.
பேசிக்கொண்டே காரில் ஏறி அமர்ந்தனர். “ஒண்ணுமில்லியேஎன்று சமாளித்தாள்.
மரியாதையா சொல்லுஎன்றான்.
இல்ல என் தீபு உத்தமன்னு நினைச்சேன் சிரித்தேன், தப்பா?” என்றாள் குரல் வெளியே வராமல்.
ம்ம் அப்படியா.... என் மது மட்டும்?” என்று அவள் முகத்தருகே குனிந்தான்.
அதோ அவங்க வராங்கஎன்றாள்
எங்க?” என்று பதறினான்
அவள் கலகலவென சிரித்தாள்.
உன்ன.... இரு, நீ அழிஞ்சே என்கிட்டே இன்னிக்கி.... அவப் பேரைச் சொல்லியா என்னை பயமுறுத்தறஎன்று அவள் முகம் இழுத்து இதழ் மீது இதழ் மூடி சுவைத்தான். பின் மெல்ல விடுவித்தான்
போதுமா தண்டனைஎன்றான் கண் சிமிட்டியபடி.
சி போ ரொம்ப மோசம்என்று சிவந்து போனாள்.

சட்டென்று பின்னாலே திரும்பிப் பார்த்தாள். நல்லவேளையாகக் கண்ணன் இன்னமும் மருந்து வேகத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். அவனுக்குதான் லேசாக உடம்பு சுட்டதென்று டாக்டரிடம் காட்டி மருந்து வாங்க வந்தாள். அப்போதுதான் வழியில் திலீப் அவளைக் கண்டு நிறுத்தினான். பின் இருவருமாக டாக்டரிடம் காண்பித்துவிட்டு மருந்துடன் வந்து கண்ணன் தூங்கிவிட்டான் என்பதால் அவனை பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.

அவளை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு தன் வீட்டை அடைந்தான். அப்போது அங்கே சுவாதி ஆட்டம் ஆடி தீர்த்துவிட்டாள். அவன் வரக் காத்திருந்தவள் போல,
உங்க மகன் எங்க போனாரு என்ன மீட்டிங் யாரோடன்னு கேளுங்க ஆண்ட்டி.... ரொம்ப உத்தமன் மாதிரி வேஷம் போடறாருஎன்று கத்தினாள்.
என்னம்மா, என் பிள்ளையைப் பற்றி என்கிட்டேயே மோசமா பேசறே.... மைன்ட் யுவர் வர்ட்ஸ் சுவாதி.... எனக்கு எம் பிள்ளையைப் பற்றி நல்லாவே தெரியும்என்றார் கோபமாக.
என்னிடம் கோபித்து பயனில்லை அவர நானே இன்னொரு பெண்ணோட பார்த்தேன்.... அது யாருன்னு கேளுங்கஎன்று கீச் கீசென்று கத்தி தீர்த்தாள்.
லிசன் சுவாதி.... அத எங்கம்மா என் கிட்ட கேட்கவே வேண்டாம்..... நானே எங்கம்மாகிட்ட சொல்லிப்பேன்.... ஆனா நீங்க ஒண்ணு புரிஞ்சுக்குங்க, நான் யாரோட வேணும்னாலும் போவேன் பேசுவேன் பழகுவேன் இட்ஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்..... நீங்க வந்ததிலிருந்து ரொம்பவே என் ப்ரைவசீல மூக்கை

நுழைக்கறீங்க இத்தோட நிறுத்திக்குங்கஎன்று நிதானமாக அமைதியாக ஆனால் திண்ணமாக கூறிவிட்டான்.