Saturday 10 April 2021

அன்றொரு பௌர்ணமி நிலவில்

 “டேய் டேய், இன்னொருமுற மாங்காவ அடிச்சீங்க கைய்ய கால முறிச்சுடுவேன்னு” ஒரு சத்தம்... கையில ஒரு தடியோட எங்க தாத்தா கத்திகிட்டு பசங்கள வெரட்றது கனா போல காட்சி தோன்றி மறையுது.

அது மற்றுமொரு பசுமையான கோடை காலம்வாசப்பக்கம் உள்ள மாமரம் குலைகுலையாக காய்த்துத் தொங்க, எதிரேயே உள்ள கவர்ன்மென்ட் ஸ்கூல் பிள்ளைகளுக்கு வாயில் நீர் ஊறுவதை யார் தடுக்க... இவர் விரட்ட அவர்கள் ஓட இன்ப விளையாட்டு.

கோடை விடுமுறை முடிஞ்சு பள்ளி திரும்பினா விடுமுறைக்கு எங்க போனீங்க என்ன செஞ்சீங்கனு கட்டுரை எழுதச் சொல்வாங்க மொத நாளே.

அதுல பலதும் பார்த்தீங்கன்னா நான் எங்க பாட்டி வீட்டுக்கு போனேன்தாத்தனோட கிராமத்துக்கு போனேன் பண்ணைவீடு போனேன்னு தான் துவங்கும்அன்று ஊட்டியும் சிம்லாவும் ஹாங்காங் அமெரிக்க சுவிட்சர்லாந்த் அத்தனை சுளுவில் இல்லை இன்று போல.

ஆனால் பாட்டனர் வீடுகளில் கிடைத்த இன்பம் பல கோடிகூட அறிவும் பண்பும் இன்னும் பலபலவும்

அந்தகால விளையாட்டுகள் பல... சின்ன பம்பரம் சுற்றுவதிலிருந்து ஆரம்பிப்போம்கயிறு கட்டுவதுஅதனை பதமாக சுழலவிட்டு தரையில் எறிவது கலை னாஅதை கயிற்றால் சுருக்கிட்டு லாவகமாக மீண்டும் கையில் ஏந்தி உள்ளங்கையில் ஓடவிடுவது மகா கலை.

ராஜராஜசோழனையும் கரிகாலனையும் வரலாற்று கிளாசில் உறங்கிக்கொண்டே கேட்ட நாம, கண் அசந்தாலும், தொடைச்சுகிட்டு ஆர்வமா தாத்தா கிட்ட ரெண்டே நாள்ல கேட்டு முடிச்சோம்அதே போல ராமாயணமும் பாரதமும்நாட்டு நடப்புந்யூஸ் கேட்பதுகண்ணையும் காதையும் திறந்து வைத்துகொண்டு மூளைக்குள் அவ்வப்போது தேவைப்படும் விஷயங்களை சேகரித்து போட்டு வைப்பதுஎன மிகவும் ரம்யமான சூழல்.

பெண்கள் தங்கள் பாட்டிகளிடம் அத்தைகளிடம் கற்றுக்கொண்டது பாசம் மட்டுமல்ல அவர்களின் கைபக்குவமும் தான்.

மருதாணி இட்ட, தலை பின்னி பூச்சூடுவதும் ஒரு கலை என புரிபடும்.

அதுவரை சமையல் கட்டிற்கு ரூட் மாப் தேடும் பெண்கள் எல்லாம் பாட்டியுடன் சேர்ந்து கூட்டு சமைத்து தாத்தாவிடமும் மற்றவர் இடமும் நல்ல பெயர் வாங்கிடுவர்அது தனி டிக்ரீக்கு சமம்.

அக்காலத்தில் கம்ப்யூட்டர் இல்லைகால்குலேட்டர் இல்லைஆனால் 11 ஐ 16 ஆல் ஒரு நொடியில் வகுத்து பெருக்கி கணக்கிட்டு பால் கணக்கும் தயிர் கணக்கும் நெல் மூட்டையும் எழுதப்படுவதை திறந்த வாய் மூடாமல் கண்டோம்.

நம் வியப்பை கண்டு என்னடா அசந்துட்டே என விளையாட்டு போல அமரவைத்து வாய்பாடுகளை பாட்டாக பாடி கைவிரல்களை கம்ப்யூட்டராக மாற்றி நம்மை கணக்கில் புலியாக்கினர் பாட்டன்கள்.

நீச்சலுக்கும் பாட்டு க்ளாசிற்கும் சொத்தை அழித்து பீஸ் கட்டி போய் கற்றதில்லைஓட்டமும் உடற்பயிற்சியும் ஜிம்முக்கு போய் வரவில்லைஏரியிலும் குளத்திலும் சக பிள்ளைகளுடன் போட்டாபோட்டியில் குதித்து முங்கி சில சமயம் மூழ்கி நீர் பருகி காப்பற்றப்பட்டு பிராக்டிகல் knowledge அடைந்தோம்.

சக்கரத்தை ஓட்டியபடி அதையும் உருட்டி நாமும் ஓடி இயற்கையை அறிந்தோம்பூமி சுற்றியபடி சூரியனை சுற்றுவதை இதைவிட எப்படி சுலபமாக சொல்ல முடியும்.

பாட்டியிடம் கற்காத கற்பகவல்லி நின்அலைபாயுதேபாட்டு க்ளாசிற்காக அலைபாய்ந்தாலும் ஏட்டில் ஏறாதது.

தாய் தந்தை சொல் கேளாதோர் கூட பாட்டி தாத்தா செல்லங்கள்தான்அவர்களுக்காக என்னவும் செய்வோம்தானே.

அம்மா தண்ணி கேட்டா அவளை பார்க்காமல் கூட மொபைலை நொண்டியபடி பாட்டிலோடு நீட்டிவிட்டு போகும் இக்கால பிள்ளைகள்.

செம்பில் நீர் மொண்டு ஆசையுடன் ‘இந்தாங்க தாத்தா தண்ணி’ என அன்போடு கொடுத்தோம் நாம்.

வெய்யில் மொத்தமும் தலையில வாங்கியாச்சாடா... போதும் உள்ள வந்து தொலையுங்க என அன்பு கட்டளைக்கு இசைந்து உள்ளே வந்து குளித்து உடைமாற்றி அன்புடன் படைத்த அமுதுண்டோம்.

இப்போதோ “வெளியில வெய்யில் பட ஓடி ஆடி விளையாடுங்களேண்டா” என கத்த வேண்டிய காலகட்டமாகியுள்ளது.

அம்மா அப்பா எங்கேயோ கண்காணா கிராமத்தில்பக்கத்து ஊர்களில்... மாதம் தேவையென அறிந்தால் மட்டுமே, பணம் மட்டுமே, சென்றடையும்தீபாவளியும் பொங்கலும் வந்து போகும்அவர்களுக்கோ, பிள்ளைகளை எதிர்பார்த்து கால் கடுத்து கண்கள் ஓய்ந்து போகும்

என்னப்பா கூப்பிட்டே, நான் ஆபீஸ் கால் ல இருக்கேன் ஏதானும் அவசரமா... ஒடம்பு ஒண்ணுமில்லைல... சரி சரி வை, நானே கூப்பட்றேன் இப்போ டிஸ்டர்ப் பண்ணாதே எனப்படுவது பிள்ளை.

பின்னர் அந்த கால் அவர்களுக்கு போகவே போகாது என்பதே உண்மை.

அப்படி என்றால் பெற்றோர் ஏதேனும் அவசரம் ஏற்பட்டால் ஒழிய உடலுக்கு உயிருக்கு எனின் மட்டுமே பிள்ளைகளை அழைக்க வேண்டுமாஆசையுடன் “அப்பா கண்ணா ராஜா எப்படிப்பா இருக்கேபொஞ்சாதி சுகமாபிள்ளைகள பார்க்கணும்போல இருக்கு ஒரெட்டு வந்துட்டு போறியா” என கேட்க கூட அவர்களுக்கு அருகதை இல்லையாநமக்கு தான் நேரமில்லாமல் போய்விட்டதா...

நல்ல கூல் breeze பௌர்ணமி வேறலாங் டிரைவ் போலாமா எனத் தோன்றும் அதே நேரம்பௌர்ணமி இரவின் பட்டு நிலவொளி கோவில் கோபுரம் மீதும் ஏரி நீரின் மேலும் தவழ்ந்து காற்று வெளியிடை கண்ணம்மா என பாட வைக்குமேஅந்த சொர்கத்தை எப்போது கண்டு களிப்போம்அங்கே சென்று தாய் தந்தையுடன் அந்த சுகத்தை பங்கிட்டுகொண்டால் ஆகாதாநிலாமுற்றத்தில் அன்னையின் கையால் ஒரு சோற்றுருண்டை உண்டால் ஆகாதா

அந்த தாயின் மடியில் தலை வைத்து படுத்து பாருங்கள்பில் கேட்சாலும் தீர்க்க முடியாத பிரச்சினைகளும் தீர்வு காணும்.

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைதிருமண வயதில் மகள் இருக்கும் தன் மகன், தன் மடியில் கிடக்க, அவன் தலை கோதி நெற்றி வழிக்கும் அந்தத் தாயின் பாசத்திற்கு ஈடு இணை உண்டா.

ஒரு பெட்ரூமிலிருந்து மற்றொன்றுக்குமேல் மாடியிலிருந்து கீழறைக்கு மொபைலில் இண்டர்காமில் வாட்சப்பில் செய்திகளும் பேச்சுகளும் பரிமாறிக்கொள்கிறோம்.
‘முகத்தை பார்த்ததில்லை
கனிமொழியை கேட்டதில்லை... திரைபாடல்தான்ஆனால் இங்கே ஒலிக்கும்போது விகாரமாக உள்ளதல்லவா.

ஒரே நேரத்தில் உண்ணுவதில்லைநல்லது கெட்டது ஆராய்வதில்லைபிரச்சினைகளை உள்ளடக்கி அது ஒரு நாள் இதயமோ மண்டையோ வெடித்து வியாதியாகவெளிவரும் வரை.

பணத்தின் அருமை தெரியவில்லை.

ராஜா, ஹாச்டலுக்கு பீஸ் கேட்டிருந்தியே பா மணி ஆர்டர் பண்ணி இருக்கேன்உடம்ப பார்த்துக்க” என அதே அட்டையில் இரண்டு வரி நுணுக்கிபால் மோர் வித்த காசும் அம்மா பெருங்காய டப்பியில் இட்டு வைத்த காசும் அந்த மண்ணின் மணத்துடன் நம்மை வந்து சேர்ந்துதான் இந்த உயர் படிப்பை முடித்தோம்காணி விற்று கழனி விற்றுத்தான் அமெரிக்க நாடுகளுக்குச் சென்று எம் எஸ் செய்தோம்டாக்டரேட் வாங்கினோம்பிராவிடன்ட் பன்ட், க்ராச்யூடி லோன் தான் நம்மை கரையேற்றியதுஅவர்கள் அங்கே பழங்கஞ்சி அருந்தி வயிற்றைகட்டிதான் நம்மை படிக்க வைத்தனர் என்ற ஒரு நொடி யோசித்தோமா,,,

லாப்டாப்பில் வேலை செய்யும்போது கூட அவ்வப்போது நாம் old file போல்டர் திறக்கிறோம்கூகிள் இல் archives நோன்டுகிறோம்ஆனால் அங்கே தனியே தவித்து உருகும் பெற்றோரை ஒரு கால் போட்டு நலம் விசாரிக்க முடியாமல் போனது.

அந்த காலத்தில் நிமிடம் பேச முப்பது ரூபாய் என அழைத்திட இயலாமல் குரல் கேட்க வழியில்லாம நகரத்தில் படித்தான் மகன்எப்படி இருக்குதோ எம் பிள்ளை என பிழிய அழுதாள் அன்னை.

இப்போதோ நொடியில் ஒரே ஒரு பட்டனை அமுக்கினால் அன்னையின் ஹலோ கேட்கும்அழைப்போமே...

ஒரு நாள் வரும்... அழைத்தாலும் எடுக்க அன்னை இருக்க மாட்டாள்அவள் குரல் இனி எப்போதுமே கேட்காது. “ராசா எப்படி தம்பி இருக்கே?” என ஆசையும் பாசமும் பரிவும் அன்பும் அவள் வினவும் அந்த வரிகள் இருக்கும்போதே அனுபவிப்போம்.

டாடிகு ரொம்ப தலைவலியா இருக்கு ஒரு காபி கொண்டுவாடா  என தந்தை வினவ,
என்னது நான் காபி போடணுமாவேலைக்காரின்னு நெனச்சியாநான் என்ன படிக்கறேன் என்ன வேலை பார்க்கறேன்னு தெரியுமா என கதவை காலால் எட்டி உதைத்து முகத்துக்கு நேரே மூடிக்கொண்டு உள்ளே செல்லும் மகள்...
நின்று, அன்னையோ தந்தையோ கேட்பதை காதில் வாங்கவும் நேரமின்றி 
டாட், போர் அடிக்காதீங்கபிரெண்ட்ஸ் வெயிட் பண்றாங்க என பைக்கை உதைத்துக்கொண்டு சர்ரென வெளியேறும் மகன்.

இரவு லேட் ஆகும் பார்டி இருக்கு மகள் கொடுப்பது  தகவல்தான்.

அத்தனை லேட் அ... எப்படிமா என கொஞ்சம் கவலை பட்டாலும் டோன்ட் பி ஸ்டுபிட், ஒலா எடுத்துப்பேன் வந்து சேருவேன்நான் என்ன சின்ன பாப்பாவாசில்லி என நமது கவலையை உதாசீனமாக்கி வெளியேறுவதே இப்போது ட்ரென்ட்.

குழந்தைகளை சகல வசதிகளுடன் வளர்க்கிறோம்சுமை அறியாது தன் சம்பாத்தியத்தை பெற்றோருடன் பங்கிட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் வளர்க்கிறோம்துணிவுடன் தன் வாழ்க்கையை அதன் பிரச்சினைகளை சமாளிக்க நாம்தான் கற்றுத் தந்தோம்அதன் பலன், நாமே அங்கே ஜீரோநமது பயம் கலக்கம் கவலை பூஞ்சையாக கருதப்படுகிறோம்சில்லிபழங்காலம்.

“அம்மாக்கு ஜுரமா இருக்குஇன்னிக்கி ஒரு நாள் நீ சமைச்சுடறியாமா எனக்கு ஆபீஸ்கு லேட் ஆகுது.?” இது தந்தை.
“டாட், ஆர் யு மாட்
நான் சமைக்கறதாஎனக்கு வேற முக்கிய வேலை இருக்குஸ்விக்கி இருக்கு ஆர்டர் பண்ணிக்கொங்கஅம்மாக்கும் ஆர்டர் பண்ணிடுங்க... வேணும்னா நான் ஆர்டர் பண்றேன். என தலையை சிலுப்பிகொண்டு போகும் மகள்ஸ்விக்கி இல் அம்மாக்கு வேண்டிய மிளகு ரசமோ கரைத்த மோர் சோரோ கிடைக்காது.
அதே மகளை பதமாக வளர்த்தால்
யூ ட்யூப் பார்த்து மிளகு ரசம் இல்லையெனினும் புலாவும் பன்னீர் மசாலாவும் செய்ய தெரிந்துள்ளனர் நம் பெண்கள். நாம் தட்டி கொடுத்து பழக்கபடுத்தும் விதத்தில் உள்ளது.

எல்லோரும் இப்படியா என்றால் இல்லை. கண்டிப்பாக உருகும் இளைய உள்ளங்கள் உள்ளன.

நாம் நடப்பதை நடத்துவதை மாற்றுவோம்.. இனியும் கொஞ்சம் நேரம் நம் பிள்ளைகளுக்கு ஒதுக்குவோம்.
அவர்கள் பாஷையில் பேசுவோம், ஆனால் நம் ஆசை விருப்பங்களை திணிக்காது என்ன வேண்டும் எப்படி செய்யலாம் என பேசி அலசி ஆராய்ந்து கைகொடுப்போம். பலனிருக்கும்.

பியானோ கூட சரியாக கட்டைகளை அமுக்கினால் தான் இனிய இசை கொடுக்கும் இல்லையேல் விகாரம்தான்.

நமக்கும் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்... நம்மை பார்த்துதான் பிள்ளைகள் நடக்கின்றனர்.

சுதந்திரம் அவசியம்சகல சவுகர்யங்களும் செய்து கொடுக்க வேண்டியது அவசியம்ஆனால் அளவுக்கு மிகுதியாக அல்லபணத்தின் அருமை பெருமை பெற்றோரின் அருமை பெருமைபாட்டனார் பெருமை தெரிய வேண்டும்நமது வேரின் மகிமை அறிய வேண்டும் போற்றப்பட வேண்டும்.

ஹை பாட்டி ஹெலோ கிராண்ட்பா இதல்ல வேண்டியதுஆசையும் அன்பும் பண்பும் பரிவும் நிறைந்த கவனிப்புஆசையுடன் அருகமர்ந்து நாலு வார்த்தை ஆயினும் இன்முகத்துடன் பேச பழக்குங்கள்மொபைலை நொண்டியபடி ஏனோ தானோ என்றல்ல.

நடக்குமாநாம் முன்மொழிந்தால் வழி நடத்தினால் இக்கால பிள்ளைகளால் எதையுமே செய்ய முடியும் சாதிக்க முடியும்.

பெற்றோர்களுக்கு தேவை நாம் அவர்கள் அருகே அமர்ந்து பேச்சை கேட்பது மட்டுமே. நேரில் சாத்தியம் இல்லாதபோதும் கூட, வாரத்தில் ஒரு நாள், சில மணித்துளிகள் போனில், விடியோ சாட்டில். குடும்பத்தின் முகங்களை குரல்களை கண்டு கேட்டு மகிழட்டுமே.

பிள்ளை பேரன்களுடன் சரி சமமாக பேச வேண்டும் அவர்கள் பாஷையில் புரிந்து அதன்படி பேச வேண்டும் என்றே பல முதியோர்கள் இன்றைய நாளில் ஸ்மார்ட் போனும் கம்ப்யூட்டரும் ஈமெயிலும் கற்று வைத்துள்ளனர்.
அவர்கள்
 அத்தனை வயோதிகத்தில் இவற்றை கற்றேனும் நம்மை நம் பாசத்தை நம் அருகாமையை அடைய முயலும்போது ஒரு ரெண்டு எட்டு ஏறி அவர்களுக்காக நாம தழைந்து கனிவு காட்ட கூடாதா

wifi கேட்டால்  என்னாது wife தெரியும் மஞ்ச பை தான் தெரியும் என்ற காலம் மாறி வருகிறது. “பாஸ்வோர்ட் முருகன்துணை போட்டுக்கோ” என கற்று தரும் தாதாக்கள் இன்று.

“இன்ஸ்டா ல உன் பிக் பார்த்தேன் சூப்பரா இருக்கேடா” என வாழ்த்தும் லைக்கும் அனுப்பும் பாட்டி. கிராமபுரத்தில் கூட இண்டர்நெட்டும் வாட்சப்பும்அவர்கள் ஏறுகின்றனர். நாம் அவர்களுக்காக இறங்குகிறோமா

பிள்ளைகளுக்கு வசதியாக வாழும்போதே உழைக்க கற்றுக்கொடுப்போம். ஒரு ரூபாய் கஷ்டப்பட்டு சம்பாதித்தால் சிகரெட் ஊதி தள்ளத் தோன்றாதுஒரு பக்கெட் தண்ணி குடம் ஊற்றினால் பிஸ்லரி பாட்டில் வாங்கத் தோன்றது.

பட்டினியாக ஒரு நாள் காலேஜ் போய் வந்தால் ஆயிரத்தில் பாதியை pizza வுக்கு செலவு செய்ய மனம் வராது.

நாம் திருந்துவோம்பிள்ளைகள் அதைக் கண்டு தானாக திருந்துவர் இல்லையேல் சொல்லி திருந்த வைப்போம்.

தெரியாத படிக்காதத பார்காதத நான் புதியதாகச் சொல்லவில்லை.

சில சமயம் கைபுண்ணையும் கண்ணாடி போட்டு பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படும்புரையோடியபின் மைக்ரோஸ்கோப்பில் பார்த்து விலகல் வெறுப்பு அலட்சியம் என்னும் குண வியாதிகளை கண்டுபிடிக்கும் நிலைக்கு தள்ளப்படக் கூடாது. வருமுன் பிள்ளைகளை காப்போம், பெற்றோர் பாட்டன்கள் மனமறிவோம்

மீண்டும் ஒரு பௌர்ணமி நிலாமுற்ற நாளில் சந்திப்போம்.