Tuesday 23 July 2019

ANBIN VAASALILE - 13


இவ்வளோ இடம் எங்கேர்ந்து மா வந்துது?” என்றார் ஆச்சர்யமாக.
அது அங்கதான் இருந்துது அங்கிள் என்று இருவருமாக சிரித்துக்கொண்டனர்.

பின்னோடு முன் ஹாலை சுத்தப்படுத்த இறங்கினாள். ஒவ்வொரு  க்யுரியோவும் அழகழகான பெயிண்டிங்குகளும் தூசு மூடிக் கிடந்தன. மொத்த வீடும் இதே போல பார்த்து பார்த்து சுத்தப் படுத்தி ஒழித்து இடம் செய்து புதுமை படுத்தி இடுப்பு விட்டுப்போனது வந்தனாவிற்கு.

இந்த வீட்டை இத்தனை கஷ்டத்திலும் வலி வேதனையோடு சரி செய்துவிட்டேன். அதேபோல தூசு மூடி அழுக்காக மங்கிக் கிடக்கும் என் தீபுவின் மனதையும் சரி செய்து, மாமா அத்தையுடன் சேர்த்துவிட இயலுமா....... இறைவா அதற்குண்டான மன உடல் வலிமையை நீதான் எனக்குக் கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொண்டாள்.
கொஞ்சம் முதுகை சாய்க்கலாம் என்று போய் படுகையில் நீட்டிக் கிடந்தாள். அப்படியே அயர்ச்சியில் உறங்கியும் போய்விட்டாள் போலும். இருட்டி தீபன் கூட அலுவலகத்திலிருந்து வந்திருந்தான். தோட்டத்திலிருந்து ஆச்சர்யபட்டுக்கொண்டே உள்ளே வந்தவன் ஒவ்வொரு மூலையும் பார்த்து அசந்து பிரமித்துப்போய் நின்றுவிட்டான்.

எப்பிடி அங்கிள்?” என்றான் கண்கள் விரிய.
அதான் தம்பி ஒரு பெண் வாழும் வீட்டின் மகிமை. அவளது கைவண்ணம் என்றார் அவர்.
ஓ மை டார்லிங், இப்போதுதான் இது வீடாக இருக்கிறது என்று மனதுள் மெச்சிக்கொண்டான்.
எங்கே உங்க செல்ல மருமக?” என்றான்.
மேலே போனாங்க, ரொம்ப அசதியா ஆயிட்டாங்கன்னு நினைக்கிறேன் தம்பி. இழுத்து போட்டு செஞ்சு ஓய்ஞ்சுட்டாங்க..... நான் கூட சொன்னேன் மெது மெதுவா செய்யலாம்னு.... கேக்கலைஎன்றார் அவர்.

அவன் மெல்ல மேலே சென்று தங்களது படுக்கை அறையை பார்த்து மேலும் கட்டுண்டு போனான். அழகிய படுக்கை உறை மாற்றி இருந்தாள். ரோஜாக்கள் கொத்து கொத்தாக படர்ந்து விரிந்தது போல உறை. அறையில் ஆங்காங்கே தோட்டத்திலிருந்து ரோஜா கொத்துகளை அழகிய பூ ஜாடிகளில் அடுக்கி இருந்தாள். திரைச்சீலைகளும் அதே ரோஜா வண்ணத்தில் மாற்றி இருந்தாள். அதில் சின்னச் சின்ன ரோஜா மொட்டுகள் கண் சிமிட்டின.
இதெல்லாம் எங்கிருந்து வந்தது..... இவளே கொண்டு வந்தாளா... வாங்கினாளா?” என்று ஆச்சர்யம் கொண்டான்.  

அவளோ அசதியாய் ஓய்ந்து அந்தப் படுக்கையிலேயே சுருண்டிருந்தாள்
. பாவம் என்று தோன்றியது.
கை கால் அலம்பி பிரெஷ் செய்துகொண்டு அருகே வந்து அமர்ந்து அவளை மெல்ல தொட்டான். கண்விழிக்க முடியாமல் மூடி மூடிப்போக அவள் அப்படியே அவன் தொடைகளைக் கட்டிக்கொண்டு உறங்கிப்போனாள். அவனுக்கு மிகவும் பாவமாகியது. மெல்ல அவளை விலக்கிவிட்டு கீழே வந்தான்.

என்ன அங்கிள் ரொம்ப சோர்வு படுத்திகிட்டா போலிருக்கு.... கண் முழிக்கக் கூட முடியலை.... சுருண்டு கிடக்காளே.... சாப்பிட்டாளா ஏதானும்?” என்று கேட்டான் கவலையாக.
ஐயோ அப்படியா...... மத்தியானம் கொஞ்சம் சாப்பிட்டதுதான் தம்பி என்றார்.
சரி என்ன சமையல்?” என்று கேட்டுத் திறந்து பார்த்தான். தனக்கும் அவளுக்குமாக ஒன்றாக தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு தண்ணீர் பாட்டிலுடன் மேலேறிச் சென்றான்.

அவள் அருகே அமர்ந்து தட்டை பக்கத்து
சைட் டேபிளில் வைத்தான். அவளை இழுத்து தன் மேலே சாய்த்துக்கொண்டான். இடது கையில் அவளை தாங்கியபடி சிறு விள்ளல்களாக சப்பாத்தியை எடுத்து குருமாவில் தோய்த்து அவள் வாயில் ஊட்டினான். பசி போலும் வாங்கிக்கொண்டு மென்று தின்றாள். அதேபோல மொத்தமும் ஊட்டினான். அப்போதும் கண் திறக்க முடியாமல் தான் கிடந்தாள். தண்ணீர் குடிக்கச் செய்து அவளை ரெண்டு தலையணை வைத்து சாய்த்து படுக்க வைத்துவிட்டு தானும் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு முடித்தான். பின் கீழே சென்று தட்டைப் போட்டுவிட்டு வாசலை அடைத்துவிட்டு விளக்குகளை அணைத்துவிட்டு மீண்டும் மேலே வந்தான். அவளை சரியாகப் படுக்க வைத்து போர்த்திவிட்டு குளிரை மிதமாக செட் செய்து வைத்தான். அவளருகே படுத்து அவள் தூக்கம் கலையாது அணைத்தபடி அவளையே பார்த்தபடி படுத்திருந்தான்.

இப்படி நீ என் வாழ்வில் வசந்தமென வர நான் என்ன புண்ணியம் செய்தேனோடீ கண்ணம்மா என்று மனம் நெகிழ்ந்தான். அப்படியே தூங்கிப் போனான்.
பாதி இரவுக்கும் மேலே மெல்ல கண்விழித்தாள் வந்தனா. ஒன்றும் புரியவில்லை.
கொஞ்ச நேரம் படுக்கலாம்னுதானே வந்தேன்.... என்ன மணி.... ஐயோ தீபு வந்துட்டாரே..... சாப்பிட்டாரா.... எனக்கு பசிக்கலையே, யாரோ ஊட்டினார்களே.... அது தீபு போலல்லவா இருந்தது..... எனக்கு ஊட்டினானா என் தீபுவா..... இந்த கடினப் பாறைக்குள் இத்தனை ஈரமா?” என்று வியந்தாள்.
பக்கத்தில் அவளை அணைத்தபடி அவன் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். அவன் தூக்கம் கலையாமல் அவன் நெற்றியில் முத்தமிட்டாள். பின் அவனை அணைத்தபடி அவளும் தூங்கிப் போனாள்.

காலையில் எழுந்தனர்.
என்னடீ இது மாயம்?” என்றான் சுற்றும் பார்வையாய ஓடவிட்டபடி.
அவள் கண்கள் விரிய நல்லா இருக்கா?” என்று கேட்டாள்.
நல்லா இருக்காவா, அற்புதம்டீ..... இப்போதான் இது வீடு, இல்லை இல்லை தேவலோகம் மாதிரி இருக்கு..... என் அழகிய ஏஞ்சல்..... என்ன மாயம் செய்தாயோடீ என்று அவளை பின்னிருந்து அணைத்து முத்தமிட்டான்.
இதுகெல்லாம் நான் என்ன பரிசு குடுக்கறது?” என்று கேட்டான் கிசுகிசுப்பாக அவள் காதோடு.
ஒண்ணும் வேண்டாம்.... நான் ஒண்ணும் பெரிசா புதுசா பண்ணலை..... எல்லா பெண்களும் அவங்கவங்க வீட்டுல பண்றதுதான் என்றாள்.
அவளை இறுக்கிக்கொண்டான்.

ஐயோ விடுங்க.... நேத்து சுத்தம் செய்துட்டு கை கால் அலம்பினேன்.... இன்னும் குளிக்க்க கூட இல்லை என்று விலகப்போனாள்.
அதெல்லாம் சேர்ந்து குளிச்சுக்கலாம் என்று அவளை இழுத்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்தான்.
ஐயோ என்ன இது காலங்காலையில என்று சிணுங்கினாள். “ஆபிஸ் போக வேண்டாமா?” என்றாள்.
இந்நிக்கி நான் லீவ் என்றான் சிறு பிள்ளைபோல.
நோ, இப்போதானே கல்யாணம், தேன் நிலவுன்னு எவ்வளவோ லீவ் போட்டாச்சு..... உடையவன் பார்க்கலைனா ஒரு முழம் கயிறுன்னு சொல்லுவாங்க..... நம்ம பிசினச நாமளே கவனிக்கலைன்னா எப்பிடி?” என்று நல்ல வார்த்தை கூறி எழுப்பிக் குளிக்க வைத்தாள். மனத்தாங்கலோடு எழுந்துக் கிளம்பி ஆபிஸ் சென்றான்.

இருக்குடீ உனக்கு ராத்திரி வெச்சுக்கிறேன் கச்சேரிய என்றபடி சென்றான்.
அவள் சிவந்து சரி சரி அப்போ பாத்துக்கலாம் இப்போ கிளம்புங்க என்று அனுப்பினாள்.
தானும் குளித்துவிட்டு வந்து விளகேற்றி பூஜை முடித்தாள். ஹப்பா என்றிருந்தது.
பின்னோடு தீபுவையும் சரி பண்ண வேண்டும் என்று நினைத்துக்கொண்டு சுற்றி வந்தாள்.

அத்யாயம் இருபத்தி ஆறு
வந்தனாவும் தீபனும் குடித்தனம் நடத்த ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகி இருந்தன. மோகமும் ஆசையுமாக அன்பான தாம்பத்யம் அன்னியோன்னியமாக அங்கு அரங்கேறி இருந்தது. மெல்ல மெல்ல அவனை கொஞ்சம் கரைத்துக் கொண்டுதான் இருந்தாள்.
என் செல்லமில்ல என் தீபு இல்ல, ஒத்துக்குங்க கண்ணாஎன்று கெஞ்சினாள் கொஞ்சினாள்.
நீங்க போன் பண்ணி வாங்கன்னு மட்டும் சொல்லீட்டு வெச்சுடுங்க, சரியா, நான் மிச்சத்தப் பாத்துக்கறேன்என்றாள்.
அதெல்லாம் முடியாதுஎன்றான் முரண்டு பிடித்தபடி.
அவங்கள மன்னிக்க மாட்டீங்களா தீபு?” என்றாள் நேராக பார்த்து.
எப்பிடிடீ மன்னிக்கச் சொல்றே?” என்றான்.
ஏன் அவங்க என்ன தப்பு பண்ணினதா நீங்க நினைக்கறீங்க?” என்று கேட்டாள்.
இன்னும் என்ன செய்யணும்?” என்றான்
அதத்தான் சொல்லுங்கங்கறேன்என்று கேட்டாள்.
எங்கம்மா செத்து ஒரு வருடத்துல இந்த இவங்கள கல்யாணம் பண்ணிகிட்டாரு.... என்னை கவனிக்காம அவங்க கூட போய்ட்டாரு..... கூடவே அடுத்த வருடமே தீபாவை வேற பெத்துகிட்டாங்க..... என்னை அடியோட மறந்துட்டாருஎன்றான் அடுக்கடுக்காக.

உங்க மனசத் தொட்டு சொல்லுங்க, உங்க அப்பா உங்களை கவனிக்காம ஊர் ஊரா போனாரு,  ஒத்துக்கறேன் ஆனா ஊர் சுத்தவா போனாரு.... இப்போ நீங்க எப்பிடி ஊர் ஊரா உங்க வியாபாரத்த பெருக்கப் போறீங்களோ அதுபோல தானே அவரும் போனாரு.... சும்மா போனாரா இல்லியே உங்களுக்கு தகுந்த வசதி, பாத்துக்க ஆளு, படை, வீடு, காருன்னு வசதி செஞ்சுட்டு தானே போனாரு..... உங்க அம்மா முடியாம கிடந்தாங்களே, அப்போ உங்கப்ப்பா அவங்க பக்கத்திலேயே தானே இருந்தாரு.... தேவைன்னு வரும்போது அவர் இருந்தாருதானே....”

நீங்க உங்கம்மாவை இழந்த சோகத்தை இன்னமும் கொண்டாடறீங்களே தீபு..... அவரவிடவா உங்க இழப்பு பெரிசு..... இதுல அவங்க ரெண்டு பேரும் அந்த காலத்திலேயே காதலிச்சு கல்யாணம் செய்தவங்க.... அவங்க அவர அப்படி சடனா விட்டுட்டு போனதும் அவர் நிலைமை எப்பிடி இருந்திருக்கும்னு யோசிச்சு பாத்திருக்கீங்களா எப்போவானும்.... அவர் பாவம் தீபு....

அப்போ ஒரு செக்ரடரியா மட்டுமில்லாம  தாய் மனசோட தான் நிர்மலா அத்தை அவரை அரவணைச்சு பாத்துகிட்டாங்க..... அந்த துக்க சூழ்நிலையில உங்களையும் தனியா வளர்க்க கஷ்டப்பட்டுகிட்டு, வீடு, பிசினஸ்னு தவியா தவிச்ச அவரு, கொடிக்கு பற்றுகோல் கிடைச்சாப்போல அவங்க அன்ப கெட்டியா பிடிச்சுகிட்டாரு....

அது தப்பா தீபு
..... கல்யாணம்னு பண்ணிகிட்டா குழந்தை பிறக்கும்தானே.... இப்போ நமக்கு மட்டும் நாளைக்கு பிறக்காதா?” என்று கூறிவிட்டு சட்டென்று வெட்கம் வந்து தலை குனிந்தாள். அவளது வெட்கம் கண்டு அவனுக்கும் சிரிப்பு வந்தது.

உங்களை அடியோட மறந்துட்டாங்கனு சொல்றீங்களே அதுவும் தப்புதான்னு உங்க மனசுக்கே தெரியும்..... மூணு நாலு வருடங்கள் வரையிலும் உங்கப்பா உங்க வீட்டுல தானே உங்க கூடத் தானே இருந்தாரு. நித்தமும் அவங்க கூட சில மணி நேரம் செலவழிச்சுட்டு மிச்ச நேரங்கள்ள இங்க இருந்தார்தானே..... நீங்கதானே அவரோட பேசாம,  ஒண்ணா ஒக்காந்து சாப்பிடாம அவர் முகம் காண பிடிக்காம அவர் இருக்கும்போது வீட்டுக்கு வராம னு அவரப் பிரிச்சீங்க..... உதாசீனப் படுத்தப்பட்டபோது அவர் மட்டும் என்ன செய்வாரு.... தன் பிசினசை சில காலம் லீசுக்கு விட்டுட்டு ஐந்து வருடங்கள் அஞ்யாத வாசம் மாதிரி வேறே ஒரு ஊருக்கே போய்ட்டாரு..... ஒரே ஊர்ல இருந்தா உங்களப் பார்க்காம பேசாம அவரால இருக்க முடியாதுன்னு பயம்தான் காரணம்..... அப்போதும் போன்ல கூப்பிட்டா கூட நீங்க பேசலையே தீபு..... எரிஞ்சு விழுந்தீங்களேஎன்றாள் பக்குவமாக எடுத்து கூறினாள்.

இதெல்லாம் இவ்வளவு விவரமா உனக்கு எப்பிடி தெரியும்?” என்றான்
நாங்க சந்திச்சுப் பேசினோம்..... சொல்லி அழுதாங்க ரெண்டு பெரும்..... அதான் என் மனசு கேக்கலை... வாக்கு குடுத்தேன்.... எப்பிடியும் உங்கள சேர்த்துட முடியும்னு நம்பினேன்...... இன்னமும் நான் நம்பிக்கை இழக்கலை..... என் வாக்கை காப்பாத்தறது உங்க கையில தான் இருக்குஎன்றாள்.
ஹ்ம்ம்என்று பெருமூச்சு விட்டான். “என்னைக் குழப்பாதே செல்லம்..... நான் யோசிக்கணும்என்று கூறி புரண்டு படுத்துக் கொண்டான்.
பாறை இளக ஆரம்பித்துள்ளதுஎன்று புன்னகைத்துக்கொண்டாள்.

அத்யாயம் இருபத்தி ஏழு
தீபன் தூக்கம் வராமல் அமைதியை இழந்தான். வந்தனா இந்த சில மாதங்களாக இதைப் பற்றியே பேசி பேசி கரைத்து வந்தாள் தான். அவனும் கூட தன் மனதளவில் இதை அலசி ஆராய்ந்து பார்த்திருந்தான் பலமுறை.... ஆனல் இன்று விளக்கமாக வந்தனா தன் தந்தையின் நிலையில் இருந்து வாதாடும்போது தனது தவறு தானோ என்ற எண்ணம் வந்து போனது...

வந்தனா சொல்வதெல்லாம் கேட்டால் உண்மை போலத் தான் தெரிகிறது....  ஒருவேளை அப்படியும் இருக்குமோ..... நான் என் இழப்பைப் பற்றி மட்டுமே யோசித்தேனே..... அவரது இழப்பைப் பற்றி நினைக்க வயதில்லை..... வயது வந்தபின் மனதில்லை என்பதுதானே உண்மை..... வந்தனாவை ஒரு நாள் கூட பார்க்காமல் இருக்க முடியவில்லை..... பாவம்தானே அப்பாஎன்று எண்ணம் தோன்றியது. யோசித்தான்... இரவு முழுவதும் தூங்க முடியாமல் புரண்டான். காலை கண்விழித்தபோது மண்டை பிளப்பது போல தலை வலித்தது. காபி குடித்தான்.

எழுந்து  குளித்து வந்தனாவிடம் கூறிவிட்டு அஷ்டலக்ஷ்மி கோவிலுக்குச் சென்றான்
. அங்கே சென்று தன் அன்னை இஷ்ட தெய்வமாக வணங்கிய லோக மாதாவை வணங்கி அருள் புரிய வேண்டினான். தெளிவு பிறந்தது போல தோன்றியது. இளங்காலை காற்றில் கடற்கரையில் கொஞ்ச தூரம் நடந்தான். முற்றிலும் தெளிவு வந்தது.
பின் வீட்டிற்கு செல்லாமல் கோவில் பிரசாதமும் கொஞ்ச பூ ஸ்வீட்சும் வாங்கிக்கொண்டு தன் தந்தையின் வீட்டிற்குச் சென்றான். அவனை அங்கே கண்டு திகைத்து மகிழ்ந்து போனார் ரகுபதி.
நிம்மி இங்க பாரேன்என்றார்.
என்னமோ என்று பயந்து கை கார்யத்தை போட்டுவிட்டு ஓடி வந்தாள் அவள். அவனைப் பார்த்து ஆனந்தத்தில் ஆழ்ந்தார்.

வா சின்னு உள்ளே வாஎன்று அழைத்தார் ரகுபதி. அவன் தயக்கமாக உள்ளே சென்றான். பூ பிரசாதம் எல்லாவற்றையும் நிர்மலாவிடம் தந்தான். இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து விழுந்து வணங்கினான்.
என்னை மன்னிச்சுடுங்க, இத்தனை வயது வந்தும் சிறு பிள்ளைத்தனமா நடந்துகிட்டேன்.... வாங்க நம்ம வீட்டில எல்லோருமா ஒண்ணா வாழலாம்..... என்னை மன்னிச்சு ஏத்துக்குங்கஎன்றான்.
அகமகிழ்ந்தனர் இருவரும்.
அடா இந்த நேரம் பார்த்து தீபா ஸ்கூலுக்கு போய்ட்டாளே..... இல்லேன இத்தனை நேரம் வீட்டையே ரெண்டு பண்ணி இருப்பாஎன்று சிரித்தார் நிர்மலா.
சித்தி...” என்று அழைத்தான். “எனக்கு அம்மான்னு கூப்பிட வரலை சித்தி..... மெல்ல மெல்லமா அதையும் பழகிப்பேன்.... என்னை மன்னிச்சுடுங்க சித்திஎன்றான்.
தம்பி என்னப்பா இதெல்லாம்.... சும்மா இரு..... பெரிய வார்த்தை எல்லாம் பேசாதேஎன்று அடக்கினாள்.

அவன் வந்த சந்தோஷத்தைக் கொண்டாட உடனே  பாயசம் செய்து தன் கையால் கொடுத்தாள்
. அவர்களது உற்சாகமும் மகிழ்ச்சியும் கண்டு நெகிழ்ந்து போனான் தீபன். ரகுபதி ஒன்றும் பெரிதாக பேசவில்லை எனினும் அவனை அருகில் அமர்த்தி அவன் தலைத் தடவி, அவன் கைகளை பிடித்துக்கொண்டே பேசினார்..... பிடித்த கை விடவே இல்லை.... ஓடி விடுவானோ என்று இறுக்கிக்கொள்வது போல இருந்தது அவர் செயல். ‘பாவம் ஏங்கிபோய்விட்டார்என்று நினைத்துக்கொண்டான்.

நான் ஆபிஸ் போகணும் பாஎன்றான் மெல்ல.
போகணுமா சின்னு.... அப்படியா சரி.... அது முக்கியமாச்சே போயிட்டு வா..... மாலையில இங்க வருவியா சின்னு ?” என்றார் ஆசையாக.
சரி நானே வந்து நம்ம வீட்டுக்கு அழச்சுகிட்டு போறேன் ரெடியா இருங்கஎன்றான்.
ஆஹ!!! அப்படியா ரொம்ப சந்தோஷம்.... அப்படியே பண்ணீடலாம் சின்னுஎன்றார்.
அவரது குழந்தைத்தனமான குதூகலம் கண்டு அவனுக்கு கண்கள் பனித்தன.
ச்சே என்ன பிள்ளை நான், என் தந்தையை ஏங்க வைத்து நானும் ஏங்கி தவித்து என்ன சாதித்தேன்என்று தன் மீதே கோபம் வந்தது. ‘சரி விடு இப்போது தான் எல்லாம் சரியாகிவிட்டதேஎன்று அடக்கினான்.

அங்கிருந்து வெளியே வந்து வண்டியிலிருந்தே வந்தனாவை அழைத்து விவரம் சொன்னான். அவள் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனாள்.
நிஜமாவா தீபு நிஜம்தானே.... நீங்க அங்க போனீங்களா தீபு?” என்று நூறுமுறை கேட்டுக்கொண்டாள்.
ஆமாண்டா உன்கிட்டே நான் பொய் சொல்வேனாஎன்றான் சிரித்தபடி.
அடுத்து என்ன தீபு?” என்று கேட்டாள்.
அடுத்து என்ன, உன்கிட்டேர்ந்து ஒரு உம்மா வாங்கறதுதான்என்றான் குறும்பாக.
சி போ, நான் அதையா கேட்டேன்என்றாள் நாணிக்கொண்டே.
நீ எது கேட்டு நான் இல்லைன்னு சொல்லி இருக்கேன் சொல்லுடி..... மாலையில நானே மறுபடி அங்கே போய் அவங்கள அழச்சுகிட்டு நம்ம வீட்டுக்குக் கூட்டி வரப் போறேன் செல்லம்என்றான்.
தீபு ஐ லவ் யு சோ மச்என்றாள் அழ்ந்த குரலில் ஆத்மார்த்தமாக.
எனக்காக தானே தீபு?” என்றாள் குழைந்த குரலில்.



3 comments: