Friday 23 August 2019

கிருஷ்ணாஷ்டமி வாழ்த்துக்கள் - கண்ணன் என் பார்வையில்

ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி வாழ்த்துக்கள்!

கண்ணன் பிறந்தான், எங்கள் கண்ணன் பிறந்தான், புதுக் கவிதைகள் பிறந்ததம்மா, மன்னன் பிறந்தான், எங்கள் மன்னன் பிறந்தான், மனக் கவலைகள் மறந்ததம்மா ஹாப்பி க்ரிஷ்ணஷ்டமி.

ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி நான் என்ன புதுசாக சொல்வதற்கு இருக்கு. இதிகாசங்களும் புராணங்களும் பாகவதமும் சொல்லாததையா நான் இங்கே சொல்ல வந்தேன், அல்லவே அல்ல.

நமது நாடு ஒரு செகுலர் நாடு. இங்கே பன்மததை சார்ந்தவரும் இருக்காங்க,

கண்ணனை அவங்களுக்கு தெரியாம போகாது. இறைவன் ஒன்றேதான் என்பதுதான் எல்லா மதத்தை சேர்ந்த ஒரே சித்தாந்தம். பின்னே இதென்ன விளக்கம்...

கிருஷ்ணன், கண்ணன் என அழைக்கப்படும் அந்த மாயவன் மாதவன் ஒரு கேரக்டர் ஆக பாத்திரமாக இங்கே பார்க்க முயலுகிறேன்.

கண்ணன் ஒரு ரோல் மாடல். நம்மை போல ஒரு சாதாரண மானுடனாக பிறந்து நாம் நித்தமும் படும் அத்தனை இன்னல்களையும் இன்னமும் பல மடங்கு அதிகமாக துன்புற்றவன் கண்ணன்.

பிறந்ததே சிறையில், கட்டுண்டு கிடக்கும் பெற்றோருக்கு. பிறந்த அன்றே அப்போதே அவர்களிடமிருந்து பிரிய வேண்டிய நிலை. இரவோடு இரவாக வேறே இடம் அன்னை தந்தை. அந்த நிலையை மிக எளிதாக தனதாக்கிக்கொண்டான். தன்னிலையாக்கி கொண்டான். Accustom Acclamatise செய்து கொண்டான்.

பிறந்த நாள் முதல் பல்வேறு ரூபத்திலும் உயிர்கொல்லும் ஆபத்து அவனை சூழ்ந்துகொண்டே தான் இருந்தது. அமுதூட்டும் அன்னையாக வந்த பூதகி துவங்கி, வளர வளர, கம்சனை வதம் செய்வது வரை ஓயவில்லை. நாளொரு கண்டம், இது survival of the fittest

அவனுக்கென சில அதீத திறமை இருந்தது, அதை சரியான நேரத்தில் சரியான வகையில் சரியான மனிதர்கள் மீதும் நிகழ்வுகளிலும் பிரயோகம் செய்து மனதை கொள்ளை கொண்டான். Use off power diligently

அவன் மாயாவியா கண்கட்டு வித்தையா தெய்வீகமா – மானுட அனுமானத்திற்கு அப்பாற்பட்ட கேள்விகளாக தோன்றலாம், ஆனால் இது எதுவுமே இல்லை. Its purely divine intervention, imagination and part of hallucination.

அவன் மீது கொண்ட பிரேமையினால் பக்தியினால் ஹீரோ வொர்ஷிப் அதிகம் ஆனது.

அந்நிலையில் கோபிகைகள் தன்வயத்தில் இல்லை. கோகுலமே அவனது அன்பினால் அவன் அவர்களோடு உண்டான பழக்க வழக்கத்தினால் கள்ளுண்ட வண்டாகி இருந்தது, அவனையே சுற்றி வந்தது. பின்பற்ற நினைத்தது. அந்நிலையில் கண்ணன் அவர்களை ஆட்கொண்டான். ஹி வாஸ் அ ஹீரோ அண்ட் leader of sorts அவர்களை முன்நடத்தினான் வழிநடத்தினான்.

சின்ன குழந்தையாவது மலையை சுண்டு விரலில் தூக்குவதாவது. ... “நடக்கும்... கண்ணா இருக்கான், அவன் மலையையும் பிரட்டி எடுத்துடுவான் தூக்கிடுவான்னு கோகுலத்து மக்கள் அவன் மீது வைத்த நம்பிக்கை. அவன் அந்த நேரத்தில் என்ன செய்தாலும் அதை அவர்கள் நம்புவார்கள். அவன் அவர்கள் இடத்தில ஏற்படுத்திய நம்பிக்கை அப்படிப்பட்டது. நம்பிக்கைக்கு பாத்திரமாக அவன் அவர்களுக்காக நின்றது அங்கே முக்கியம். 

நம்ம வீட்டு குழந்தைகளிலேயே நாம் பார்க்கிறோம், அங்கே இங்கே கேள்விபடுகிறோம் பேச்சு பாட்டு நடனம் கராத்தே இப்படி பலவும் சாதிக்கிறாங்க. நாம் பசங்கள உற்சாகப்படுத்த படுத்த அவங்க முயற்சி அதிகமாகுது. நாம் அவர் மீது வைக்கும் நம்பிக்கை அவங்கள செய்ய வேண்டியதில் உள்ள focus ஐ அதிகப்படுத்துது.... சோ, end ரிசல்ட் மிக சிறப்பாக வருகிறது.

அசாதாரணம்னு எடுத்துகிட்டாலும் கூட, இது மாயை இல்லை. அயராத பயிற்சி உழைப்பு. உடல் அளவிலும் கூடவே மனதுக்குமான பயிற்சி.

இதை நாம் சாதிக்க வேண்டும், இவர்களுக்கு தன்னை விட்டால் யாருமில்லை. இவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக நான் நடக்க வேண்டும். இவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற தீவிர முயற்சி அங்கே வெற்றி பட்டது.

அசகாய சூர விஷயங்கள் எல்லாமே இதில் அடங்கும். Sense of responsibility and accountability and commitment. ஒனர்ஷிப்

கண்ணன் மனதளவில் எப்போதுமே குழந்தை. அந்த குழந்தைத்தனம் சில்மிஷங்களாக விஷமத்தனங்களாக பல இடங்களில் வெளிப்பட்டது. naughtiness நம்மிலே சிலர் கூட வயதானபின் அப்படி செய்வதை பார்க்கிறோம்.

கண்ணன் வம்புதும்பு செய்யாமல் இல்லை typically a child like behaviour. children ought to be mischievous and troublesome esp boys.

அவனுக்கும் தாய்பாசம் உண்டு. அம்மாவே உலகம். அவன் அன்னை யஷோதாவிற்கோ கண்ணனே சர்வம். எல்லா அன்னைக்கும்தானே... பிள்ளைகள் தானே சொர்க்கம். அந்த பாசம் என்னும் மாயை அவள் கண்ணை மறைத்தது. அவள் கண்ணனின் சிறு வாயில் உலகமே அவளுக்கு கண்டது.

கண்ணனுக்கும் ஆசாபாசங்கள் உண்டு... கோபிகைகளுடனான அவனது பந்தம், நல்லதொரு நட்பு... CO-ED ல படிச்சா நாம் எல்லோருக்குமே அந்த நட்பு புரியும்.

அதை மிஞ்சி ராதை. இது ஒரு மிக அழகான பந்தம். SOULMATE. கண்ணன் ரொம்ப அதிருஷ்டசாலி. சின்ன வயதிலேயே அவனால் அவனது SOULMATE ஐ கண்டுகொள்ள முடிந்தது. SOULMATE DON;T ALWAYS MARRY. இதையும் அவன் UANRTHIVITAAN.

அவள் மேல் அவனும், அவன் மேல் அவளும் கொண்ட அதீத பிரேமை எல்லா லைலா மஜ்னு அம்பிகாபதி அமராவதிக்கும் அப்பாற்பட்ட காதல். ETERNAL LOVE. IT DIDN’T EVEN END EVEN AT DEATH.

ருக்குமணியுடன் உண்டான காதல் பந்தம், நாட்டு நடப்பு போல, நம் எல்லோரையும் போல வயது வந்த முதிர்ந்த தெரிந்த அறிந்த புரிந்த காதல். இந்த காலத்தை போல அன்றும் காதலியை வில்லனிடம் சண்டையிட்டு கடத்தி கொண்டு வந்து காதல் மணம் புரிந்தான்.

அடுத்த முக்கிய கட்டம் பாரத போர்

தர்மம் நிலைக்க வேண்டும். அதற்கான எதுவும் செய்யலாம். அதையே கண்ணன் செய்தான். தர்மம் பக்கமும் தருமர் பக்கமும் நின்றான்.

போரிட மாட்டேன் என குந்தி தேவி, அவன் அத்தைக்கு வாக்கு கொடுத்தான்

அதனால் தேரோட்டியானான். கையில் வில்லேந்தாமலே போரை வழி நடத்தினான். mentoring his fav friend, pupil and mate.

எதிரே நிற்பது தன் தமையன்மார்கள் மாமன்கள் தாத்தன்கள் பாட்டன்கள் குரு மணிகள் என்றதும் அர்ஜுனன்கு உதறியது. மனசு பதறியது.

கடமையை ஆற்றும்போது ஆங்கே பாசத்திற்கும் பந்தத்திற்கும் இடமில்லை.

நம் வாழ்விலேயே கூட பார்தோமானால் ஒரு டாக்டர் தன் குழந்தை மனைவி மக்களுக்கு வைத்தியம் பார்க்கும்போது கை நடுங்கக் கூடாது. மனசு பதற கூடாது.

காவல் அதிகாரி தன் சொந்தங்களை நட்புகளை கைது செய்வதானாலும் தர்மத்தின் கடனை சரியாக செய்ய வேண்டும். அதில் சிறிதும் விலகக் கூடாது. வக்கீலாக இருப்பினும் தன் மகனோ தந்தையோ குற்றவாளியாக கூண்டில் நின்றாலும் அவன் நெஞ்சு நிமிர்த்தி அவர்களுக்கு எதிராக வாதாட வேண்டி வந்தால் செய்ய வேண்டும். இதைத்தான் கண்ணன் சொன்னான். செய்ய வைத்தான்.

இன்று வரை நம்மையும் வழி நடத்தி வாழ வைக்கிறான்.

கண்ணன் என பார்க்காமல் ஒரு காந்தியாக கலாமாக வள்ளுவராக பாருங்கள் கண்ணன் நிலை புரியும், கண்ணன் வழிகாட்டியவை தெரியும். சொன்ன கீதை மனதில் படியும். இறைவனாகதான் காண வேண்டும் என அவசியமில்லை.

ஆசானாக தமையனாக தம்பியாக தந்தையாக ஆசிரியராக குருவாக காணலாம். அப்போதும் கண்ணன் கண்ணனாகதான் இருப்பான். செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் சரியாக செய்வான், நம்மை சரியாக செய்யவும் வைப்பான்.

ஹிந்தி ல சொல்வாங்க ‘கிஸ்மத் சே ஆகே வக்த் சே பெஹலே’ எதுவுமே நடக்காது. நேரம் தான் எல்லாமே. நம் கர்மாவை தாண்டி எதுவுமே அசையாது நடக்காது. ஆனால் நடக்க வேண்டியவை சரியாகவே நடக்கும். வணங்குவோம், அவனை வாழ்த்துவோம்.

கிருஷ்ணாற்பணமஸ்து.

No comments:

Post a Comment